Tamilnadu

News August 28, 2025

கள்ளக்குறிச்சி அருகே ஆன்லைன் மோசடி: ரூ.41 லட்சம் இழப்பு

image

சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொன்முடி மரவள்ளி கிழங்கு இடைத்தகராக இருக்கிறார். பொன்முடி சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்து 509 பணத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் குறித்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.

News August 28, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.05 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ. 5.00 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 28, 2025

ஆக.29 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்குகிறார். இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு உருளைகள் பதிவு செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் உள்ள குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம்.

News August 28, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.27) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

ஆக.30, 31 மதுக்கடைகள் மூட உத்தரவு

image

குமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- குமரியில் ஆக.30, 31ல் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை உட்பட 11 இடங்களில் நடைபெறுகிறது. எனவே ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள மதுபானக் கடைகள் & எப்.எல். உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி முடியும் வரை மூட உத்தரவிட்டுள்ளார்.

News August 28, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.27) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவலர்கள் எண்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று இரவு 11 மணி முதல், இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.

▶️ பட்டம்மாள் நடேசன் மண்டபம், மாங்காடு
▶️ அரசு உயர்நிலைப்பள்ளி, மதுரமங்கலம்
▶️ ஊராட்சி மன்ற அலுவலகம், காவித்தண்டலம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருமுடிவாக்கம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்கதிர்பூர்

பொதுமக்கள் நேரில் சென்று உங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உரிய தீர்வை பெறலாம். SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தர்மபுரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.

▶️ மீனாட்சி மஹால், தர்மபுரி
▶️ PKS மண்டபம், பாப்பாரப்பட்டி
▶️ சமுதாயக் கூடம், மாதேஹள்ளி
▶️ VPRC கட்டடம், செல்லமுடி
▶️ VM மஹால் சிக்கமாரண்ட அள்ளி
▶️ ஸ்ரீ ராகவேந்திரர் மண்டபம், கொலகம்பட்டி
முகாம்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம், தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 28, 2025

விழுப்புரத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிற்பத்தில் யானை மீது அமர்ந்து பவனி வருவது போன்ற முருகனின் அழகிய கற்சிற்பம் ஒன்று விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய சிற்பம் விழுப்புரம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்

error: Content is protected !!