India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, கரூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்தது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
தூத்துக்குடியில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 14 பயனாளிகளுக்கு ரூபாய் 47கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நசியனுார், ராயர்பாளையத்தை சேர்ந்த, கணவனை இழந்து தனியே வசிக்கும், 60 வயது பெண், தனக்கு ஆண் துணைதேவை என, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த திண்டுக்கல சேர்ந்த மனோஜ்குமார் 29 விண்ணப்பிக்க, இருவரும் பேசி பழகி உள்ளனர். பின் அந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடி சென்றான், அந்த பெண்மணி சித்தோடு போலீஸில் புகார் அளிக்க அந்த வாலிபரை கைது செய்த போலிஸார் கோபி கிளை சிறையில் அடைத்தனர்.
நெல்லை கலெக்டர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தந்தூரி சிக்கன், சவர்மா போன்ற உணவுகள் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ளது. அதில் பயன்படுத்தப்படும் மயோனைஸ் கேடு விளைவிப்பதாக அதனை ஒரு ஆண்டுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே உணவு நிறுவனங்கள் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டார்.
கோவை மேயர் ரங்கநாயகி தங்கி இருக்கும் அரசு பங்களாவில் நேற்று வெடிகுண்டு வெடிக்கும் என்று நேற்று மிரட்டல் விடுத்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர். விசாரணையில், குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்:16848) நாளை ஏப்.28 மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது. மாறாக, அருப்புக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை 0வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *SHARE*
சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணைப்பகுதியையும், வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், கோவை, பூச்சமருத்தூர் காட்டேஜ் சுற்றுலா, வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் <
அஞ்சுகிராமத்தில் வடமாநில வாலிபர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். போலீசார் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கையில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக உள்ள பிரவீன் குமார் என்பவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். பிரவீன்குமார் சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது மர்ம கும்பல் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவரது உடல் சிவகங்கை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.