Tamilnadu

News March 20, 2024

செங்கல்பட்டு: அதிமுக நிர்வாகிகள் உற்சாகம்

image

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட ஆறு தொகுதியில் உள்ளடக்கியதாகும்.

News March 20, 2024

அரியலூர் அருகே ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக படிவம் 12 D வழங்குதல் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஆய்வு செய்தார். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி முதியவருக்கு படிவம் 12 D வழங்கினார். மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விடுபடாமல் படிவம் வழங்கிட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

News March 20, 2024

தூத்துக்குடி: திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

image

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதியில் நேற்று திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் முகவர்கள் பணி செய்வது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

News March 20, 2024

ஆரணி அருகே மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு

image

ஆரணி அருகே இராட்டிணமங்கலம் ஊராட்சிகுட்பட்ட இ.பி.நகரில் உள்ள ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில்
ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் இபி.நகர் குமார்
ஆசிரியைகள் உமாராணி, சோபனா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

News March 20, 2024

பழனிக்கு புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

image

பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனஞ்ஜெய் இன்று பொறுப்பேற்றார். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்ட தனஞ்ஜெய் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். காவலர்கள் தனஜெயனை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். பழனியில் பணியாற்றி வந்த டிஎஸ்பி சுப்பையா தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 20, 2024

மாற்றுத்திறனாளிக்கு தபால் வாக்கு படிவம் வழங்கிய கலெக்டர்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வகையில் படிவம் 12 D ஐ வேலூர் சலவன்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளரிடம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி  இன்று (மார்ச் 20) வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்  கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News March 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் மார்ச். 25, 26 ஆகிய 2 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று வலியுறுத்தியுள்ளார்.

News March 20, 2024

விழுப்புரம் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன்?

image

பாரதிய ஜனதா மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் (தனி) தொகுதி வேட்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ள வடிவேல் ராவணன் இத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என பாமகவினர் எதிர்பார்க்கின்றனர்.

News March 20, 2024

நாமக்கல் :அதிமுக வேட்பாளர் பயோ டேட்டா

image

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்தவர் ராஹா. எஸ் தமிழ்மணி(64). கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இவர் எண்ணெய் நிறுவனம் நடத்துகிறார்.
மனைவி – சகுமதி , மகன் – திலீபன், மகள் – யாழினி.
அதிமுகவின் நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.

News March 20, 2024

புதுக்கோட்டை அருகே பெண்ணின் விபரீத செயல்

image

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

error: Content is protected !!