Tamilnadu

News March 20, 2024

மத்திய சென்னை தேமுதிகவுக்கு ஒதுக்கீடு

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு மத்திய சென்னை உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

News March 20, 2024

விருதுநகர் தேமுதிக-வுக்கு ஒதுக்கீடு..!

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

News March 20, 2024

மரக்காணம் : கொலையில் வெளியான தகவல்

image

மரக்காணம், பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த மணியரசு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (மார்ச் 19) பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் அன்பு என்பவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அன்புவின் மனைவி வெண்ணிலாவிற்கும், மணியரசுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை பலமுறை அன்பு கண்டித்தும் மணியரசு கேட்காததால் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, ஏரியில் மூழ்கடித்தது தெரியவந்துள்ளது.

News March 20, 2024

மயிலாடுதுறை பயணிகளுக்கு ஓர் தகவல்

image

திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற தேர்த் திருவிழா நாளை மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு செல்வோர் காலை 7.10 மணிக்கு உள்ள ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வருகை தர காலை 9.30 மணிக்கு திருவாரூரில் ரயில் இருப்பதாக அறிவித்தனர்.

News March 20, 2024

நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ எதிர்ப்பு!

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்தநிலையில் நாளை (மார்ச் 21) தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் நெல்லை தொகுதியில் சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இன்று (மார்ச் 19) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

தென்காசி: ரூ.1.48 லட்சம் பறிமுதல் 

image

தென்காசி மத்தளம் பாறை சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் தலைமையில் இன்று நடைபெற்ற வாகன தணிக்கையின் போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற காரை மறித்து நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.48 லட்சம் பிடிப்பட்டது. பிடிபட்ட பணத்தை வட்டாட்சியர் முத்துவிடம் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.

News March 20, 2024

நாமக்கல்லில் கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

image

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.20) தொடங்கியது, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர், ரமேஷ் என்பவர் காந்தி வேடத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் டெபாசிட் செய்த 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நோட்டுகளாக ஒரு பையில் போட்டு தோளில் சுமந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 20, 2024

கடலூர் அருகே ரூ.5000 பறிமுதல் 

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.20) சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகமது கௌஸ் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.5 லட்சம் இருந்ததால் இதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் தனி வட்டாச்சியர் பலராமனிடம் வழங்கப்பட்டது.

News March 20, 2024

கள்ளக்குறிச்சி எம்.பி-க்கு மீண்டும் சீட் வழங்க மறுப்பு

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பொன் கௌதமசிகாமணி. இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திமுக தலைமைக் கழகம் வாய்ப்பு மறுத்துள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக இன்று மலையரசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

விருதுநகர் அருகே போக்குவரத்து நெரிசல்

image

சிவகாசி மாநகராட்சிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பாய்ஸ் ஸ்கூல் அருகே காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் முறையாக போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததே இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

error: Content is protected !!