India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரடியாக சென்று கொடுக்க வேண்டியது இல்லை. மாறாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அலைபேசி எண் 9498181200 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்களது புகாரை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (37). இவர் 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சுதாகரை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுவையில் மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், கழுத்துக்கு மேற்புறமாக காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் உருவாகி கடுமையான வலி காய்ச்சல் உருவாகும். இருமல், தும்மல் மூலம் மற்றவர்களுக்கு எளிதாக பரவும். இதற்கு பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று புதுவை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
விருதுநகர் அருகே மீசலூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (54). இவர் ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் சிவகாசி சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் மாரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருச்சி மாவட்டம் ஊரக பகுதி மற்றும் மாநகர பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாமென செய்தி குறிப்பில் கலெக்டர் நேற்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளோா் அவரவா் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தோ்தல் ஆணையத்தின் நிலையான உத்தரவு என கூறினார்கள்.
Sorry, no posts matched your criteria.