India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.
நீலகிரி விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தப் பட்டு வருகிறது. இம்மாதம் குறைதீர் கூட்டம் நாளை (மார்ச் 22) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்து உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேட்டூர் சட்டமன்ற தொகுதி தருமபுரி மக்களவைத் தொகுதியில் அடங்கும்.
சென்னையில், ஐபிஎல் போட்டி நடைபெறும் மார்ச் 22(நாளை) மற்றும் 26ம் தேதிகளில் வேளச்சேரி – சிந்தாதிரிபேட்டை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐபிஎல் டி-20 தொடரின் 17வது சீசன் நாளை(மார்ச் 22) சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து சென்னை அணியின் போட்டியை காண ரசிகர்கள் அதிகளவில் வருவர் என்பதால், போக்குவரத்துக்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தி.மு.கவின் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார் மணி.
சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் மக்களவை தொகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளராக தஞ்சாவூரை சேர்ந்த தேன்மொழியும், சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளராக பெரம்பலூரை சேர்ந்த ஜான்சி ராணியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை SRGDS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட இறகு பந்து போட்டி நடைபெற்றது . இதில் தனியார் மற்றும் அரசு பள்ளி சார்ந்த 20 அணிகள் பங்கு பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் சான்று மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.