Namakkal

News December 20, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சண்முகம் (9498168906) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 20, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 20ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ 5.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் தொடர்ச்சியாக முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற அளவில் விலை நீடிக்கிறது.

News December 20, 2024

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNPSC குரூப்2, 2ஏ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாட திட்டத்தின்படி முதன்மைத் தேர்வுக்கான (கணினி வழி தேர்வு முறை) நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச.23 முதல் (திங்கள் – வெள்ளிக்கிழமை வரை, காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை) நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.

News December 20, 2024

கோரிக்கை மனு வழங்கிய எம்பி ராஜேஷ்குமார்

image

நாமக்கல்லிருந்து ஓமன் நாட்டிற்குஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான முட்டைகள் தற்போது அந்நாட்டின் துறைமுகத்தில் கப்பலில் உள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை உடனே இறக்குமதி செய்திடவும், போன்று கத்தார் நாட்டில் முட்டைஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கிடவும், ஒன்றியவெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார் எம்பி ராஜேஷ்குமார்.

News December 20, 2024

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நாளை (டிச.21) காலை 10 மணிக்கு சேந்தமங்கலம் அரசு கல்லூரி வளாகத்தில் புதிய தொழில் பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

News December 20, 2024

பள்ளி மாணவனை கண்டித்த மாவட்ட ஆட்சியர் 

image

ராசிபுரம் வட்டம் தொப்பம்பட்டியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது, 18 வயது குறைந்த பள்ளி மாணவன் அவ்வழியாக வாகனம் இயக்குவதை பார்த்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவனை கண்டித்து, வாகனத்தை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடார்.

News December 20, 2024

பள்ளி மாணவனை கண்டித்த மாவட்ட ஆட்சியர் 

image

இராசிபுரம் வட்டம் தொப்பம்பட்டியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது, 18 வயது குறைந்த பள்ளி மாணவன் அவ்வழியாக வாகனம் இயக்குவதை பார்த்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவனை கண்டித்து, வாகனத்தை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க இராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடார்.

News December 19, 2024

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – சுப்பிரமணியன் (9498173585), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – பழனி (9498110873) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 19, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நாமக்கல்லில் இரட்டைக் கொலை: சிக்கிய மூவர் ➤ மல்லசமுத்திரத்தில் ரூ.1.35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் ➤ நாமக்கல்லில் விலை உயரும் பீன்ஸ் ➤ பில்லானல்லூர் பேரூராட்சியில் ஆட்சியர் ஆய்வு ➤ வாகனங்கள் மோதியதில் இரு மூதாட்டிகள் பலி ➤ நாமக்கல்லில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ➤ பட்டணம் பேரூராட்சி பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ➤ பரமத்தி பகுதிகளில் பூக்கள் விலை உயர்வு

News December 19, 2024

வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. 

error: Content is protected !!