India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
2.இறைச்சி கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதிப்பு
3.மல்லசமுத்திரம் அருகே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
4.நாமக்கல் அருகே பிடிபிட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
5.கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 சரிவு
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளித்தார். மேலும் இன்று மார்கழி மாத முதல் ஞாயிறு முன்னிட்டு காலை 10:30 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்புஅபிஷேகமாக சொர்ண அபிஷேகம் நடைபெற்றது மாலை வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தங்கமணி (9443736199), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாநகராட்சியில் (22/12/2024) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில், மாநகராட்சி உத்தரவுப்படி துப்புரவு அலுவலர் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் இருப்பதை ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.
காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை செல்லும் சாலையில் நாச்சிப்புதூர் ஏரி பகுதியில், சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு அவ்வழியே ஊர்ந்து வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உத்திர கிடிகாவல் ஊராட்சி செயலர் சுரேஷிடம் கூறினர். அவர் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் விட்டனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.93க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.88 ஆக சரிவடைந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.91 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
1.கொண்டி செட்டிபட்டி ஏரி நிரம்பி சாலையில் தேங்கிய நீர்
2.தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
3.ராசிபுரத்தில் பட்டுக்கூடு ரூ.82 ஆயிரத்திற்கு ஏலம்
4.பெரியமணலி : வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
5.நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்பி ராஜேஷ்குமார்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (21.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கான வானிலையில், பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பகல் வெப்பம் 87.8க்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4க்கு மிகாமலும் இருக்கக் கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1.நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை ரூ 5.50
2.நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
3.மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்பி ராஜேஷ்குமார்
4.பல்லத்து கருப்பனார் கோயிலில் சிறப்பு பூஜை
5.போலீஸ் எஸ்எஸ்ஐ வீட்டில் திருடிய இரண்டு பேர் கைது
Sorry, no posts matched your criteria.