Namakkal

News December 26, 2024

அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்

image

நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழா 30ந் தேதியும் அரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு வரும் 10ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளின்படி உணவு தயாரிப்பு பதிவு சான்று பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04286 299429 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News December 26, 2024

ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம்

image

நாமக்கல் நகரில் மையத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகிறார். இன்று 26 ஆம் தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு கிரீடத்துடன் கூடிய தங்க கவசம் சாத்தப்பட்டது. மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர்.

News December 26, 2024

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சி அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று  ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News December 26, 2024

நாமக்கல்லில் முட்டைக்கோழி விலை சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.83 ஆக குறைந்துள்ளது. முட்டை விலை 550 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.94 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News December 26, 2024

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு பின் 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட உள்ளது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

News December 26, 2024

நாமக்கல் அருகே அதிகாலையில் மழை

image

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வாம்பட்டியில் இன்று அதிகாலை 3 மணிக்கு பரவலாக மழை பெய்தது. போன வாரம் பெய்த மழையில் இங்கு இருந்த குட்டைகள் நிரம்பியிருந்தன. இந்த வாரம் முழுவதும் வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இன்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. உங்கள் பகுதியில் மழையா? கமெண்ட் பண்ணுங்க மக்களே!

News December 25, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நல்லூர்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை ➤ நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு ➤ வெப்படை அருகே போலி பெண் மருத்துவர் கைது ➤ நாமக்கல்லில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம் ➤ பரமத்தி வேலூரில் கடையில் பயங்கர தீ விபத்து ➤ வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் ➤ நாமக்கல்லில் வேலுநாச்சியார் நினைவு தினம் அனுசரிப்பு

News December 25, 2024

நாமக்கல்லில் இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 25, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 25ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது.

News December 25, 2024

ராசிபுரத்தில் வாஜ்பாய் 100வது பிறந்த நாள் விழா

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சியின் மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

error: Content is protected !!