India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 31/12/2024 அன்று செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. எரிவாயு விநியோகம் தொடர்பாக குறைகளை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புவோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில், அனுமன் ஜெயந்தி விழா 30.12.2024 (ம) அரங்கநாதர் சன்னதியின் வைகுந்த ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) 10.01.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. அதுசமயம் அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளின்படி உணவு தயாரிப்பு பதிவு சான்று பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே அமைந்துள்ள வேலகவுண்டம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஏஓவை தாக்கிய திருமுருகன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வேல கவுண்டம்பட்டி போலீசார் திருமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. விஏஓவை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 15 நாட்களாக வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் அத்துமீறலை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க இன்று ராசிபுரத்தில் அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி தலைமையில் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது.
இந்திய பொருளாதாரத்தை தலை நிமிரவைத்து ஊக்குவித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். அவருடைய மறைவு இந்திய திருநாட்டிற்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி ஆழ்ந்த இரங்கலை நாமக்கல்லிலிருந்து அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 2024 டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாமக்கல் ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் நாமக்கல் மாநகராட்சி செயல்படுகிறது. இந்நிலையில் இன்று 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாமக்கல் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 26 ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பினும், விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 என்ற விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
➤ நாமக்கல்லில் முட்டைக்கோழி விலை சரிவு ➤ திருச்செங்கோட்டில் சிபிஐ நூற்றாண்டு விழா ➤ வள்ளிபுரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி ➤ அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைகள் இடிப்பு ➤ கண்ணூர்பட்டியில் புதிய அங்கன்வாடியை திறந்து வைத்த எம்பி ➤ ஜேடர்பாளையத்தில் தார்ச்சாலை சீரமைக்கும் பணி ➤ நாமக்கல்லில் இன்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (26.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – ரஞ்சித்குமார் (9092987019), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.