India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் பாரத பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லியில் கத்தார் நாட்டு தூதரகத்தில் கத்தார் தூதர் Afraa Ghanim Al Saleh-ஐ தமிழ்நாட்டில் இருந்து கத்தார் நாட்டிற்கு அனுப்பப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை தளர்த்த கோரி தமிழ்நாடு கோழிப்பண்ணை தொழில் சங்கங்களின் தலைவர்களுடன் இணைந்து நாமக்கல் எம்.பி. ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனிடையே நேற்று இரவு வளையப்பட்டியில் 232வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 5.50 விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
1.நாமக்கல் பால் உற்பத்தியாளர்கள் கருத்து கேட்பு கூட்டம்
2.தொழில் – வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடக்கம்
3.சேர்வாம்பட்டியில் மழை பெய்தது
4.இலக்கியத் திறனறித் தேர்வில் மாநில அளவில் சாதனை
5.வாள்வீச்சு வீராங்கனை சரக அலுவலகத்தில் பொறுப்பேற்பு
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு 11 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது மாலை வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (27.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (7548826260), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் – பரமத்தி சாலை கொங்கு மண்டபத்தில் நடைபெற்ற BNI BRAMMA தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை இன்று நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் BNI BRAMMA அமைப்பினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது., மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராசிபுரம் வட்டம் ஏ.கே. சமுத்திரத்தில் உள்ள ஞானோதயா பள்ளி மாணவி தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்வை அரசு தேர்வுகள் இயக்கம் நடத்தி வருகிறது. இத்தேர்வை சுமார் இரண்டு இலட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதியிருந்தனர். மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் முதல்வர், மற்றும் தமிழாசிரியர் குமரேசன் அவர்களை பள்ளியின் தலைவர் வாழ்த்தினார்.
Sorry, no posts matched your criteria.