Namakkal

News December 29, 2024

கொல்லிமலையில் மர்ம விலங்கு நடமாட்டம்

image

கொல்லிமலையில், 200க்கும் மேற் பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், கால் நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.மேலும் அடிக்கடி மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.வனத்துறையினர் ஆடுகளை கடித்து வரும் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

News December 29, 2024

நாமக்கல் உழவர் சந்தை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 29ம் தேதி காய் கனி பூ விலை நிலவரம் கத்தரி ரூ 48 தக்காளி ரூ 24 முருங்கை ரூ 150 வெண்டை ரூ 24 தேங்காய் ரூ 54 சின்னவெங்காயம் ரூ 60 பெரியவெங்காயம் ரூ 42 பீன்ஸ் ரூ 66 கேரட் ரூ 65 பீட்ரூட் ரூ 80 உருளை ரூ 50 இதனிடையே கடந்த 21ம் தேதி ஒரு கிலோ அவரை ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தை தாண்டி இன்று 29ந் தேதி வரை ஒரு கிலோ அவரை ரூ110க்கு விற்பனை செய்யப்பட்டது.

News December 28, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. ரூ 5.50 ஆக இருந்த முட்டை இக்கூட்டத்தில் 20 காசுகள் குறைக்கப்பட்டது. குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

News December 28, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1..நாமக்கல்: மாவட்டத்தில் விஜயகாந்த் நினைவஞ்சலி நடைபெற்றது.
2.நாமக்கல்: ஒரு லட்சத்து எட்டு வடை தயாரிக்கும் பணி தீவிரம்
3.பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4.நாமக்கல் எம்பி கத்தார் நாட்டு தூதரிடம் கோரிக்கை
5.நாமக்கல் ஆட்சியருக்கு சத்துணவு ஊழியர் சங்கம் நன்றி

News December 28, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (28.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 28, 2024

நாமக்கல்: IITM Pravartak ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

image

திருச்செங்கோடு வட்டம் கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி, IITM Pravartak ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. IITM Pravartak ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சங்கர் ராமன் மற்றும் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மாணவர்கள் கல்வி தரம் மேம்படவும் வேலைவாய்ப்பு பெறவும் உதவுகிறது.

News December 28, 2024

நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் 31ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புவோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

நாமக்கல் ஆட்சியருக்கு சத்துணவு ஊழியர் சங்கம் நன்றி

image

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் நாமக்கல் மாவட்டத்தில் சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து கூறவும் நாமக்கல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

News December 28, 2024

நாமக்கல்லில் இன்றுமுதல் கனமழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மார்கழி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இன்று காலை 10:30 மணி அளவில் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.

error: Content is protected !!