Namakkal

News December 29, 2024

கிரிக்கெட்டில் நாமக்கல் மாணவி சாதனை

image

2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அணி மகத்தான வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளது. இதில் மோகனூர் டிரினிடி மகளிர் கல்லூரியின் மாணவி ஶ்ரீநிதி தமிழ்நாடு அணியில் 11 பேர் அணிக்குழுவில் இடம் பெற்று ஆல்ரவுண்டர் ஆக ஜொலித்தார். இவருக்கு கல்லூரி தலைவர் நல்லுசாமி பாராட்டினார்.

News December 29, 2024

இரவு ரோந்து பணிக்காக காவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்களின் விவரம்: நாமக்கல் – வேத பிறவி (94981 67158), ராசிபுரம் நடராஜன் (94422 42611), திருச்செங்கோடு -வெங்கட்ராமன் (94981 72040), வேலூர்- கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 29, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 என்ற விலையிலேயே நீடிக்கிறது.

News December 29, 2024

நாமக்கல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசால் Naan Mudhalvan Finishing School என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது 18-35 வயது வரை உள்ள வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துவதே ஆகும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், ]மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ 7904111101, 9080242036, 948774509 தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2024

முத்தங்கியில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சிநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத ஞாயிற்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் பெற்றனர்.

News December 29, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 8000 ஹெக்டரில் நெற்பயிர் சாகுபடி

image

நாமக்கல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை நெல் 8219 எக்டர், சிறுதானியங்கள் 77791 எக்டர், பயறு வகைகள் 11226 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 29376 எக்டர், பருத்தி 1759 எக்டர் மற்றும் கரும்பு 8378 எக்டர் என மொத்தம் 136749 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. என நாமக்கல் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் மழை

image

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (24.12.2024) 889.2 மி.மீ.மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 172.66 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 29, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக நாமக்கல்லை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆட்சியர் உமா அறிவுறுத்தி உள்ளார். குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக சைல்டுலைன் எண்ணான 1098 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

நாமக்கல்லில் பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை 30ம் தேதி திங்கட்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஆட்சியர் உமா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

News December 29, 2024

நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின்தடை செய்யப்படும் பகுதிகள்: நாமகிரிப்பேட்டை, குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர் பந்தல்காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூர், பச்சடையாம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி

error: Content is protected !!