India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று புதுமைப்பெண் விரிவாக்கம் தொடக்க விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், 15 நபர்களுக்கு ரூ.30,000 பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் .
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.
➤ நாமக்கல்லில் சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக நிர்வாகி ➤ செந்நாய் மற்றும் நாய்களின் தாக்குதலால் ஆடுகள் இறப்பு ➤1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் ➤ களப்பநாயக்கன்பட்டியில் சாரல் மழை ➤ அதிமுகவினர் ராசிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ➤ முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கைது ➤நாமக்கல்லில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் ➤ வெண்ணந்தூரில் லேசான மழை
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (30.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல், திருச்செங்கோடு – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
ராசிபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கைது ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் அனுமதி இன்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா உள்ளிட்ட கட்சியினர் கைது செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று (டிச.30) அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதற்காக நாமக்கல் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிய உள்ள காரணத்தால் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு பணியில் எஸ் ராஜேஷ் கண்ணன் தலைமையில் சுமார் 2,000 போலீசார் நாமக்கல் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 57 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாமக்கல் திமுக எம்பி ராஜேஷ்குமாரின் தாத்தாவின் நண்பரும் புதுச்சத்திரம் கொளத்துப்பாளையத்தில் ராசிபுரம் நிலவள வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவருமான கணபதி தனது 92வது வயதில் 23.12.24 அன்று இயற்கை எய்தினார். அவருக்கு எம்பி ராஜேஷ்குமார் மற்றும் புதுச்சத்திரம் ஒன்றிய செயலர் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 64 கிராம பஞ்சாயத்துகளில் வரப்புகளில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்திட 2560 ஹெக்டேர் பரப்பிற்கு பயறு வகை விதைகள் 50% மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 2013 விவசாயிகளுக்கு 2486 எக்டர் பரப்பிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக சோலார் பம்ப்செட் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டிற்கான இலக்கானது 21 எண்களுக்கு பெறப்பட்டு, 21 எண்களுக்கு பணிகள் முடிக்கப்பட்டு 13 எண்களுக்கான மாநில பங்கு 15.98 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உலக புகழ்பெற்றது. அக்கோவிலில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவானது நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகின்றது. அப்பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டும் தெரிந்துகொண்டார்.
Sorry, no posts matched your criteria.