Namakkal

News October 22, 2025

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை!

image

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது. இதனிடையே கொல்லிமலையில் பெய்து வரும் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க நாமக்கல் மாவட்ட வனத்துறை தடைவித்துள்ளது.

News October 22, 2025

நாமக்கல்: எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், எஸ்.பி. விமலா தலைமையில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News October 22, 2025

நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 22, 2025

நாமக்கல்: பால் பண்ணை தொடங்க மானியம் பெறுவது எப்படி?

image

1) நாமக்கல் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

News October 22, 2025

நாமக்கல்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

image

நாமக்கல் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க! இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 22, 2025

நாமக்கல் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை(அக்.23) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 22, 2025

நாமக்கல்லில் ரூ.15.06 கோடிக்கு மது விற்பனை!

image

நாமக்கல் மாவட்டத்தில் இந்த தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களில் ரூ.15.06 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின் தீபாவளி விற்பனையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

News October 22, 2025

நாமக்கல் காவல்துறையின் எச்சரிக்கை!

image

மழைக்காலம் என்பதால் குழந்தைகளை ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் குளிக்க விடாமல் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை காரணமாக நீர்நிலைகளின் ஆழம், நீரோட்டம் அதிகரித்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம். பாதுகாப்பே முதன்மை என மக்கள் நலனுக்காக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 22, 2025

JUST IN: நாமக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!