Namakkal

News April 27, 2025

நாமக்கல் மாவட்ட EB எண்கள்!

image

▶️செயற்பொறியாளர், நாமக்கல்: 9445852390
▶️செயற்பொறியாளர், பரமத்திவேலூர்: 9445852430
▶️செயற்பொறியாளர், ராசிபுரம்: 9445852420
▶️செயற்பொறியாளர், திருச்செங்கோடு: 9445852410
▶️செயற்பொறியாளர், சங்ககிரி: 9445852250

News April 27, 2025

நாமக்கல்லில் பாஜகவினர் கைது !

image

நாமக்கல்: சேத்தமங்களம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பாஜக சார்பில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் சில சர்ச்சைக்குறிய வாசகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்நிலையில், அப்பகுதி போலீசார் அந்த பேனரை அகற்றி செந்தில் குமரன், இளங்குமரன் ஆகிய பாஜகவினரைக் கைது செய்தனர்.

News April 27, 2025

நாமக்கல் போலீஸ் அதிரடி நடவடிக்கை!

image

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ் தலைமையில், நல்லூர் போலீசார் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், திடுமல் குட்ட பள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி, பாலசுப்ரமணியம், பூபதி, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஊறல் சாராயம், 17 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.

News April 26, 2025

நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப். 26) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.10 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

News April 26, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு 1 கிலோ ரூ.88 என நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-26) நடைபெற்ற கூட்டத்தில், கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85 ஆகவும், அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 26, 2025

நாமக்கல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

பள்ளி பயிலும் மாணாக்கர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் சேர நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 05 மே 2025. SHARE IT!

News April 26, 2025

நாமக்கல்லில் தீராத நோய்கள் தீர்க்கும் கோயில்!

image

பேளுக்குறிச்சியில், பழனியப்பர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை, வேட்டைக்காரன் வடிவில், தலையின் உச்சியில் முடியை முடிச்சு போட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியை வசீகரித்து திருமணம் செய்ய அழகான வேட்டைக்கார இளைஞனாக வேடமணிந்த தலம் இது. தோல், எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர். SHARE பண்ணுங்க!

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

நாமக்கல்: மோகனூரில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் திருக்கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

நாமக்கல்: மோகனூரில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் திருக்கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 26, 2025

நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிநாய்த்தடுப்பபூசி முகாம்

image

உலக கால்நடைகள் தினம் ஒவ்வோரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளிலும் வெறி நோய்த்தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணி முதல் 12 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!