Namakkal

News October 1, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை(அக்.2) இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்ல 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், அக்.2 அதிகாலை 4:55 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை செல்ல 06122 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 1, 2025

நாமக்கல்: சிறுவனுக்கு சிகரெட்டால் சூடு!

image

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள வடுகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(28). கடந்த 21ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன்(7) எனும் சிறுவனிடம் கடைக்கு செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு அச்சிறுவன் மறுத்ததால் சிறுவன் கையில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். இதுகுறித்த போலீஸ் புகாரில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News September 30, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.30 நாமக்கல்-(தேசிங்கன், 8668105073) ,வேலூர் -( ரவி- 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி- 9498169110 ), குமாரபாளையம் -(செல்வராஜு- 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 30, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (30.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

நாமக்கல்: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

image

நாமக்கல் மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 30, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயிலில் அக்டோபர் 6 முதல் 31 ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு 3 tier AC பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. இந்த, 22497 திருச்சி ஹம்சாஃபர் ரயில் நாமக்கல்லில் நாளை(அக்.1) இரவு 07:45க்கு செல்வதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

News September 30, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து இன்று(செப்.30) இரவு 8:45 மணியளவில் ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம் – மைசூர் ரயிலிலும், 06240 திருநெல்வேலி – மைசூர் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம்.

News September 30, 2025

நாமக்கல்: DRIVING தெரிந்திருந்தால் அரசு பணி!

image

நாமக்கல் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு <<>>கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE IT

News September 30, 2025

நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாமக்கல் மக்களே.., இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ஹாய் என்று ஆங்கிலத்தில் மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 30, 2025

கரூர் துயரம் ; நாமக்கல் போலீஸ் எச்சரிக்கை!

image

நாமக்கல் மக்களே.., கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் நடந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களின் விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. ஏதேனும் வதந்தி பரப்புவது தெரிய வந்தால், அல்லது காவல்துறைக்கு தேவைப்பாட்டால் விசாரணை, கைது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜாக்கிரதையுடன் பதிவிட அறிவுறுத்தப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!