India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட கல்குவாரி குறித்து தகவல் தெரிவிக்காத நிலையில் வி.ஏ.ஓ.க்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைக்கண்டித்து, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வி.ஏ.ஓ.க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத திங்கள்க்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாமக்கல்லில் மட்டும் 73 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
நாமக்கல், கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள கரடு புறம்போக்கில் அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதில் 23 வாகனங்கள் பறிமுதல் செய்தும், ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிறகு அனுமதியின்றி கல்குவாரி இயக்கிய விவகாரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்காத நாமக்கல் ஆர்டிஓ உட்பட இரண்டு விஏஓக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் காவல்துறை சார்பாக தினமும் இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள், எஸ்.பி. அவர்களால் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று 23ஆம் தேதி ரோந்து அதிகாரிகள்: நாமக்கல் பகுதியில் யுவராஜன் 9498177803, ராசிபுரம் பகுதியில் கோமளவள்ளி 8610270472, திருச்செங்கோடு பகுதியில் சிவக்குமார் 9498176695, வேலூர் பகுதியில் ராதா 9498174333 அதிகாரிகள் இன்று ரோந்து பணிக்காக எஸ்.பி. அவர்களால் நியமிக்கப்படுகின்றனர்.
இந்தியக் கடலோர காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10 மற்றும் +2 முடித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளமாக 21 ஆயிரம் முதல் 47,600 வரை வழங்கப்படும் . விண்ணப்பிக்க இங்கே <
குமாரபாளையம், வளையக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 59; காய்கறி வியாபாரி. இவரது மனைவி பொன்னியம்மாள். கடந்த, வட்டமலை சந்தைக்கு காய்கறி வியாபாரத்துக்கு ஆறுமுகம் சென்றார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 14ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கணவரின் மரணம் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மனைவி போலீசில் புகார் செய்தார்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு சார்பாக 200க்கும் மேற்பட்ட தமிழகத்தின் முன்னணி மற்றும் உலக அளவில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரி முதுநிலை பட்டதாரி என அனைவரும் கலந்து கொள்ளலாம். இடம் ஞானமணி கல்லூரி வளாகம் 01/03/2025சனிக்கிழமை நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஏழாவது படிக்கும் மாணவி ஒருவரை, நேற்று பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளான். இதனை பொதுமக்கள் வசம் அந்த மாணவி சொல்ல, பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து கவனித்துள்ளனர். தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.