India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மரு.கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார்.இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் வேட்பாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஐஜேகே மூத்த நிர்வாகி முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய கூட்டணி கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஈஸ்வரன் ,பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் பணிமனையை திறந்து வைத்தனர்.

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களை பொறுப்பாக பயன்படுத்தி சரியான தகவல்களை பொது மக்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சியினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் சேலம் சாலையில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தங்கமணி தலைமையில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்ததாக பொய் பிரச்சாரம் செய்வதாக தங்கமணி பேசினார்.

மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா 100% வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பேருந்து பயணிகளை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியையொட்டி இன்று நாமக்கல் தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனா்.
நாமக்கல் – துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் பேராலயத்தில் காலையில் இளைஞா் ஒருவா் சிலுவையை சுமந்தபடி வருவதும், அவா் அடித்து துன்புறுத்தப்படுவதும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளமான வாட்சப் மற்றும் மெஸ்சேன்ஜர் பக்கங்களில அரசு உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகளின் படங்களை (profile picture) ஆக வைத்து ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது. குற்றவாளிகள் அதிகாரிகள் போல பேசி பணம் கேட்டு ஏமாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமுடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமகிரிப்பேட்டை, மூலக்காடு பகுதியில் அமைந்துள்ள இவென் மோர் புட்ஸில் சிறுதானியங்களை பதப்படுத்தி பல்வேறு விதமான மதிப்பு கூட்டு பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வது மற்றும் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி கிராமப்புற அனுபவ பயிற்சி மாணவிகளுக்கு உரிமையாளர் ஜனகன் செயல் விளக்கம் அளித்தார்.

நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட தாக்கல், செய்யபட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமா முன்னிலையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 41 வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் உமா இன்று மாலை. வெளியிட்டுள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவால் மரணமடைந்தார் அவருக்கு மதிமுகவின் நாமக்கல் நகரக் கழகத்தின் சார்பில் நாமக்கல்லில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் நாமக்கல் நகர செயலாளர் வைகோ பாலு தலைமையில் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் தொண்டரணி அமைப்பாளர் மூர்த்தி தொழிலாளர் அணி சண்முகம் ஆபத்துகள் அணி அன்பு மாவட்ட பிரதிநிதி எருமப்பட்டி மனோகரன் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.