India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் முன்னாள் அமைச்சர் ஆர்எம் வீரப்பன் மறைவையொட்டி நாமக்கல்லில் எம்ஜிஆர் கழகத்தின் மாஜி மாவட்ட செயலாளர் வெள்ளையன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் எம்ஜிஆர் கழக நிர்வாகி பழனி பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சின்னசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் செயலாளரும் தெரிவிக்கும் போது நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைவார் என ஈஸ்வரன் தெரிவித்தார் .மேலும் இந்திய கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்தார்

நாமக்கல்லில் வெப்பம் 40.0 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாமக்கல் மாவட்ட நாடுகள் சங்கம் சார்பில் யுகாதி விழா நாமக்கல் எஸ் பி எஸ் மண்டபத்தில் இன்று தொடங்கியது.சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் கடவுளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் யுகாதி விழா சிறப்பாக தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான நாயுடு சமூக மக்கள் கலந்து கொண்டுள்ளனர்

நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு ‘நோயற்ற வாழ்வு, நலமான வாழ்வு’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரியின் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் வீ.கோகிலா நம் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்று மாணவிகளிடம் ஆலோசனை வழங்கினார்.

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் பணம் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார். அப்போது, கடந்த தேர்தலில் 303 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தோம். இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றார்.
திமுக, காங்கிரஸ் குடும்பத்திற்காக உழைக்கிறது. பாஜக நாட்டிற்காக உழைக்கிறது .ராணுவ தளவாடங்களை நாமே தயாரித்து பயன்படுத்தி வருவதாக கூறினார்.

அமைச்சர் மதிவேந்தன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து அப்ப நாயக்கன்பட்டி,போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் ராசிபுரம் ஒன்றிய சேர்மன் ஜெகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.