Namakkal

News May 2, 2024

திருச்செங்கோடு அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

திருச்செங்கோடு அருகே உள்ள பணங்காட்டுபாளையம் என்ற இடத்தில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 7 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கராஜ்(38)என்பவரை போலீசார் கைது செய்தனர்

News May 1, 2024

சிறப்பு அலங்காரத்தில் நஞ்சுண்டேஸ்வரர்

image

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஏரிக்கரை அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மையார் உடனுறை ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. 34 ஆவது நாள் மண்டல அபிஷேக பூஜையில் மூலவர் ஸ்ரீ பார்வதி அம்மையார் மற்றும் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

News May 1, 2024

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இன்சுரன்ஸ் செய்து கொடுத்த மாவட்டசெயலாளர்

image

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மே நினைவுச் சின்னத்தின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பழைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை தனது சொந்த செலவில் தயவு செய்து கொடுத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 1, 2024

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டை கோழி கிலோ ரூ.90 ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.124 ஆகவும் விற்பனையாகின்றது . கடந்த இரண்டு நாட்களில் முட்டை விலை 10 காசுகள் உயர்வடைந்துள்ளது.

News May 1, 2024

நாமக்கல்:மாணவா்களை பள்ளியில் சோ்க்க வேண்டும்!

image

நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள முதன்மை கல்வி அலுவலத்தில், மாவட்ட ஆட்சியா் ச. உமா நேற்று ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநின்ற, பள்ளி செல்லாத மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

News April 30, 2024

நாமக்கல்லில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

image

ராஜஸ்தான் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பெண்கள் தாலியை குறித்து பேசியதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட மகளிரணி தலைவி மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி நிர்வாகி ராணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள் தாலியை பற்றி பேசியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

News April 30, 2024

நாமக்கல்: வெப்ப அலை தாக்கம்

image

தமிழ்நாட்டில் மே 2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். மே 2ம் தேதிக்கு பின் வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

நாமக்கல்: சாலை அகலப்படுத்தும் பணி

image

நாமக்கல் ,மோகனூர் வட்டம், என்.புதுப்பட்டியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) சார்பில், ரூ.104.54 கோடி மதிப்பீட்டில் முசிறி நாமக்கல் சாலை இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 30, 2024

பொது மக்களுக்கு இடையூறாக இருந்த நிழல் கூடம் இடிக்கப்பட்டது

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை, ஜீவா செட் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக நிழல் கூடம் அமைக்கப்பட்டது. இது பொது மக்களுக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ,இதை அகற்ற வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நெடுஞ்சாலை துறையினர், நிழற்குடைத்தை முழுமையாக இடித்து தகர்த்தனர்.

News April 30, 2024

நாமக்கல் மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

நாமக்கல்லில் நேற்று (ஏப்.29) 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் நாமக்கல் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

error: Content is protected !!