India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை மேலும் ரூ.18 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.102ஆக ஆனது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு, முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாகவும் இருந்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாமக்கல் “முட்டை நகரம்” என அழைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் நாமக்கல்லுக்கு “நாமக்கல்” என பெயர் எப்படி வந்தது. இவ்வூரின் பழைய பெயர் “ஆரைக்கல்” என கூறுகின்றனர். மேலும், “நாமகிரி” என்ற பெயரிலிருந்து நாமக்கல் என உருவானதாகவும் என்கின்றனர். நாமக்கல் மாவட்ட மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது என கமெண்ட் பண்ணுங்க.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சித்தலைவர் ச.உமா இன்று (01.03.2025) நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏ.கே.சமுத்திரம், பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் உட்பட பலர் உள்ளனர்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்க கவசசிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் பி ராஜேஷ்குமார் தனது இணையதள பக்கத்தில் மக்கள் போற்றும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள ஆவரங்காட்டு புதூரைச் சேர்ந்தவர் ரங்கன்(80). உடல் நல முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். நேற்று முன்தினம் இவரது மனைவி வீராயி சமைப்பதற்காக விறகடுப்பில் தீ பற்றிய போது ரங்கன் படுத்திருந்த வீடு குடிசை வீட்டில் தீப்பற்றியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம் வாசுகி நகர் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த, இவரது மனைவி சுதா வீட்டில் இருந்த எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – தமிழ்குமரன் (8610101063), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாமக்கல் மட்டும் 73 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்னப்பிக்க இங்கே<
Sorry, no posts matched your criteria.