Namakkal

News July 8, 2025

நாமக்கல்லில் நாளை மின் ரத்து அறிவிப்பு

image

நாமக்கல் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக நாளை(ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபடி, நாமக்கல், நெல்லியாராயண், அய்யம்பாளையம், வெற்றிப்பட்டி, வையந்ததம், NGGO காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் ரத்து ஏற்படும். இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!

News July 8, 2025

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

News July 8, 2025

அவசர கடனுதவிக்கு இங்கே செல்லலாம்!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மூலம் அவசர மருத்துவத் தேவை, கல்வித் தேவை, திருமணம் போன்ற எவ்வித அவசரத் தேவைகளுக்கும் கடனுதவி பெற முடியும். மாதச் சம்பளம் வாங்கும் எவரும் ரூ.7 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும், நிலையான தொழில் முனைவோரும் இதற்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 11%. <<16987924>>*விண்ணப்பிப்பது எப்படி*<<>> உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 8, 2025

கூட்டுறவு வங்கியில் அவசரக் கடன் பெறுவது எப்படி?

image

▶️ இதற்கு உங்களது CIBIL 720ஆக இருக்க வேண்டும்.

▶️ <>TNSC<<>> பக்கத்தில் உள்ள லோன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

▶️ அந்த விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களான ஆதார், பான், வருமான சான்றிதழ், பணி சான்றிதழ் ஆகியவற்றௌடன் இணைத்து அருகே உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம்.

அங்கு உங்களின் தகுதி சரிபார்க்கப்பட்டு உங்களின் சம்பள வங்கிக் கணக்கிற்கே லோன் தொகை வழங்கப்படும். SHARE IT

News July 8, 2025

நாமக்கல்லில் இன்று மின் தடை!

image

நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கபிலர் மலை, அய்யம்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், இருக்கூர், சேளூர், சாணார்பாளையம், அண்ணா நகர், தண்ணீர் பந்தல், கோணங்கிப்பட்டி, பொன்னேரி, கெட்டிமேடு, தூசூர், பொம்மசமுத்திரம், கனவாய்பட்டி, ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(ஜூலை 8) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE!

News July 8, 2025

நாமக்கல்: 9வது நாளாக முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை, நேற்றும் (ஜூலை 7) 9-வது நாளாக ரூ.5.75 ஆக நீடிக்கும் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.97-க்கும், முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ.106-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

News July 7, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 7 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- பாலசுப்ரமணியம் ( 9442851418), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), பள்ளிபாளையம் – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – மருதபாண்டி ( 9344457738), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .

News July 7, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 7) நாமக்கல் – வெங்கடாச்சலம் ( 9445492164), ராசிபுரம் – கோமளவல்லி ( 8610270472), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .

News July 7, 2025

நாமக்கல் அருகே 2 கார்கள் மோதி விபத்து!

image

நாமக்கல்: குமாரமங்கலம் அருகே, இராசிபுரம் மற்றும் நாமக்கல் பிரிவு ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மாலை 4 மணியளவில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு தலை மற்றும் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கரட்டுப்பாளையம் போலீசார், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News July 7, 2025

10th தேர்ச்சி பெற்றால் உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 68 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974687>>தொடர்ச்சி<<>> (1\2)

error: Content is protected !!