Namakkal

News April 28, 2025

கடன் சுமை நீக்கும் நாமக்கல் கோயில்!

image

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 28, 2025

நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

image

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. இது 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. SHARE IT!

News April 28, 2025

நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

image

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் இந்த கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

News April 28, 2025

நாமக்கல் சத்துணவு மையத்தில் உதவியாளர் வேலை

image

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 321 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். சம்பளமாக ரூ.3000- 9000 வழங்கப்படும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும்.

News April 28, 2025

நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

image

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் இந்த கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

News April 28, 2025

10 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

image

நாமக்கல்: குமாரபாளையத்தில் 2012ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், திருப்பத்தூர் மாவட்டம் கோட்டான்கல்லூர், பெரம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாது என்கிற கொர மாது (வயது 47). இவர் 2015ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கோவையில் கைது செய்தனர்.

News April 27, 2025

நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 27) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

News April 27, 2025

நாமக்கல்: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு 

image

ராசிபுரம் அடுத்து அத்திப்பலகானூர் அருகே ரயிலில் இருந்த பயணி ஒருவர் தவறி விழுந்ததாக, பயணிகள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து தவறி விழுந்தாரா? வேறு ஏதும் காரணங்களா என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 27, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-27) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 27, 2025

நாமக்கல்லில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45,000. விண்ணப்பங்களை பதிவிறக்க இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!