India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரையிலான, இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்வதால் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண் இடுபொருள், இருப்பு விபரங்கள், மானியத் திட்டங்கள் அறிந்துகொண்டு மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டா் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிள், பணிபுரியும் அலுவலர்கள் பணிகளை செய்து கொடுக்க லஞ்சம் கேட்கக்கூடாது. இதை மீறி யாராவது லஞ்சம் கேட்டால், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகாரளிக்கலாம். மேலும், 04286-281331, 9445048878, 9498190735, 9445048933 ஆகிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள விவசாய கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறைகளில் 2 வருட டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் (21.08.2025 முதல் 29.08.2025 வரை). விண்ணப்பிக்க https://tnau.ac.in (அ) நேரடியாக பல்கலைக்கழகத்தை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) வெளியிடப்பட்ட அறிவிப்பில், ’வாகன உரியாளர்மைகளுக்கு போக்குவரத்து விதிமீறல், தொடர்பாக உங்களுக்கு வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், APK File, தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். உங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். மேலும், உதவிக்கு 1930, இணையதள புகார்களுக்கு www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்’
நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் இந்நிலையில் இன்று
(ஆகஸ்ட்25) நாமக்கல்- ராஜமோகன் 94422-56423, ராசிபுரம்-சின்னப்பன் 94981-69092, குமாரபாளையம்- செல்வராஜு 99944-97140, பள்ளிபாளையம்- டேவிட் பாலு 94865-40373, வேலூர்-ரவி 94981-68482 ஆகியோர் உள்ளனர்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில், வரும் (28-08-2025) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உயர்வுக்கு படி’ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், அரசு கலை (ம)அறிவியல் கல்லூரி/ பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை உள்ளிட்ட வாய்ப்புகள் செய்து தரப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25) நாமக்கல்-கோவிந்தராசன்,94981 70004, இராசிபுரம் சங்கரபாண்டியன் – 9655230300, தி.கோடு- வளர்மதி 825405987, வேலூர் – ஷாஜகான் 9498167357 ஆகியோர் பணியில் ஈடுபட உள்ளனர்.
நீங்களும் எஸ்பிஐ-யில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க இங்கே <
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத முதல் திங்கட்கிழமையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணியளவில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு பலவித வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Sorry, no posts matched your criteria.