India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக, விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் வைக்கப்பட உள்ள நிலையில், நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல், பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் தொடக்கப் பள்ளியில் உள்ள பூத் எண் 226-ல் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது குடும்பத்துடன் இன்று வந்து வாக்களித்தார். மேலும் காலை முதலே பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது, மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில், 9 மணி நிலவரப்படி, 12.88 சதவீதம் ஓட்டு பதிவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்
வி.எஸ்.மாதேஸ்வரன்
பொட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து செலுத்தினார். வாக்குப்பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

மக்களவை 24 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு இலவசமாக சென்று திரும்ப மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு அரசு சார்பில் அரசு வாகனங்களில் இலவசமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க ஏதுவாக 2, 786 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உ.மா தெரிவித்துள்ளார்.

மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹெர்குல் ஜித் கவுர் முன்னிலையில் இன்று நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் ஒட்டி நாமக்கல்லில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கோட்டை தொடக்க பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளன.வாக்கு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.வாக்குப்பெட்டிகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.பதற்றமான வாக்குசாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுகவை சேர்ந்த ஏகேபி சின்ராஜ் வெற்றிபெற்றார். இவர், மொத்தம் 55.24% வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவை சேர்ந்த காளியப்பன் 31.85 % வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பெற்றார். கடைசி இடத்தில் சுயேச்சை வேட்பாளர் சிவராஜி இருக்கிறார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 341. நாளை ஜனநாயக கடைமை ஆற்ற தவறாதீர்!
Sorry, no posts matched your criteria.