Namakkal

News October 5, 2025

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 42. இவர் தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர, டூவீலரில் சானார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் குறுக்கே சென்றதால், நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 5, 2025

நாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

வேலகவுண்டம்பட்டி, சிங்கிலிப்பட்டியில் பேப்பர் அட்டை தயாரிக்கும் ஆலை நடத்தி வரும் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ், 37 இவர் அதே பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமி தனியாக கடைக்கு சென்ற போது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி பின் போக்சோவில் ராஜேஷை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

News October 5, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (அக்டோபர். 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 5) முதல் முட்டையின் விலை ரூ. 5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 5, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.04 நாமக்கல்-(தேசிங்கன்- 8668105073) ,வேலூர் -( ரவி- 9498168482 ), ராசிபுரம் -(கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு- 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 4, 2025

எடப்பாடி பழனிசாமி நாமக்கல் சுற்றுப் பயணத்தில் மாற்றம்!

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 07 முதல் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாளை (அக்.05), மறுநாள் (அக்.06) நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் அக்.08ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும், அக்.09ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதியிலும் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

News October 4, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

நாமக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 4, 2025

நாமக்கல்: திருமண தடை நீங்க இங்க போங்க!

image

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். SHARE பண்ணுங்க!

News October 4, 2025

நாமக்கல்: அக்.10 கடைசி தேதி ஆட்சியர் தகவல்!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெறுவதற்கு வரும் அக்.10ந் தேதிக்குள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற (ம) பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும். இணைய தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் டிச.13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு மின் ஒயரிங் தொழிலில் 5 வருட செய்முறை அனுபவம் (ம) 21 வயது நிரம்பியவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் https://skilltraining.tn.gov.in/ இல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அக்.17க்குள் அனுப்பிக்க வைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தகவல். SHAREIT

error: Content is protected !!