Namakkal

News March 11, 2025

நாமக்கல்லில் தந்தையை கொலை செய்த மகன்

image

நாமக்கல், மோகனூர் அடுத்த அரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் காராள கவுண்டர் (85). இவரது மகன் முருகேசன் (50) நேற்று தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை காராள கவுண்டரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

News March 10, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (10/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 10, 2025

நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்த பாண்டு!

image

குமாரபாளையத்தில் பிறந்து நாமக்கல் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்தவர் நகைச்சுவை நடிகர் பாண்டு. 1981ஆம் ஆண்டில் ’கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படம் மூலாம் அறிமுகமாகி, நூற்றுக்கணக்கான படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சிறப்பான ஓவியராகவும் இருந்தவர். அதிமுக கொடி, சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு தனது 74வது வயதில் பாண்டு உயிரிழந்தார்.

News March 10, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வெயில், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு சற்று குறைந்தது. இதன் காரணமாக முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.80 ஆகவே நீடிக்கிறது.

News March 10, 2025

ஆட்சியரிடம் 340 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் உமா அவர்கள் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை, பொதுமக்கள் வழங்கினர். இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 10, 2025

மக்களுடன் முதல்வர் முகாம் இடங்கள் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், மக்களுடன் முதல்வர் திட்ட 3-ம் கட்ட முகாம்  நடைபெற்று வருகிறது. நாளை 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News March 10, 2025

நாமக்கல் மாவட்டத்தில் வெப்பம் அதிகமானது 

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல் பரமத்தியில் அதிகபட்சமாக 101.3° டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் , கர்ப்பிணிப்பெண்கள் , பெரியவர்கள் , குழந்தைகள் மதிய வேளையில் அதிகம் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 10, 2025

நாமக்கல்: அரசு தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலை

image

தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்

News March 10, 2025

நாமக்கல்லில் நாட்டுக்கோழி விலை உயர்வு

image

நாமக்கல்,பரமத்தி வேலூர் பகுதியில் நேற்று நாட்டுக்கோழி சந்தை நடைபெற்றது. இங்கு திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுகோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் கொண்டு வந்து இருந்தனர்.இந்தநிலையில் நஞ்சை, இடையாறு பகுதியில் கோயில் திருவிழா நடைபெறும் காரணத்தால் கடந்த வாரம் 550க்கு விற்பனையான நாட்டுக்கோழி, தற்போது 650க்கு விற்பனை செய்யப்பட்டதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

News March 9, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.3.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. வெயில், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பண்ணை கொள்முதல் விலை 3.80 ஆகவே நீடித்தது.

error: Content is protected !!