India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மே மாதத்தில் 15 நாட்களில் 136 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளாகியுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் டெங்கு மதிப்பில் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று அறிவுறுத்தி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் வரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் 5 வருட காலத்திற்கு பெறப்படும் வட்டியில்லா கடன் தொகையினை திருப்பி செலுத்தி பயன்பெறலாம். இத்திட்டம் குறித்த தகவல்களுக்கு நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அறை எண்:06 தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது தொலைபேசி எண்:04286-280019 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு ச.உமா நேற்று தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வேலை செய்ய விருப்பமுள்ள செவிலியர்களுக்கு அயல் நாட்டு மொழிகளான ஜெர்மன், ஜப்பான் போன்ற மொழிகளை இலவசமாக பயிற்சி அளிப்பது குறித்த, தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் (63791 79200) மற்றும் அலுவலக தொலைபேசி எண்களில் 044-22502267, 22505886 தொடர்புகொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நகராட்சியில், டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்து உறுதிமொழி வாசித்தார். இதில் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் நாமக்கல்லில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்ததையடுத்து இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நாமக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை உள்ளிட்ட பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மூலம் தெரிவிக்கலாம். மேலும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் நடைபெற்ற மழை தொடர்பான முன்னெச்சரிக்கை கூட்டத்தில் ஆட்சியர் ச.உமா தகவல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 17.5.24 முதல் 19.5.24 வரை பலத்த மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தயார் நிலை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.