India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாநிலங்களவை எம்பியும் ,நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை அமைப்பாளருமான ராஜேஷ் குமார், அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, நாமக்கல்லில் நடைபெற உள்ள பொது பேரவை கூட்டத் தொடக்க தீர்மானங்கள் அடங்கிய புத்தகத்தை வழங்கி ,கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 571 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.

நாமக்கல், இராசிபுரம் அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் இரவில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக விவசாயிகள் கூறிய நிலையில் இதுகுறித்து விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை நேற்று இரவு மற்றும் இன்றும் ஆராய கால் பதித்த தடங்கள் ஆய்வு செய்தும் சிசிடிவிகளையும் ஆராய்ந்து வருகின்றர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று 24ஆம் தேதி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கலந்து கொண்டு பல்வேறு தரப்பினரிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆனி மாத திங்கட்கிழமை முன்னிட்டு இன்று 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால் தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்கக் கவசம் சாற்றப்பட்டு வெட்டிவேர் மாலை அணிவித்து மகாதீபம் காண்பிக்கப்பட்டது. பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாம் நடத்தப்பட்டு இரத்தம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரத்த தானம் வழங்கிய 44 கொடையாளர்களுக்கு, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் வேண்டி நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்துக்கொள்ள அதன் நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறு குறு நடுத்தர தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தைச் சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வரும் 26ஆம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் ‘நீங்களும் தொழில் தொடங்கலாம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொழில் முனைவோராக விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ராசிபுரத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்தாரை அழைத்து செல்ல வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பவர் காரை google மேப் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் புதிய பேருந்து நிலையும் பின்புறம் தட்டாங்குட்டை வழியாக செல்லும் பொழுது சாக்கடைக்குள் தவறி விழுந்தது. இதில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.