Namakkal

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

நாமக்கல் வந்த அர்ஜுன் பானர்ஜி

image

மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்துள்ளது இந்நிலையில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜுன் பானர்ஜி உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் நுண் பார்வையாளர்கள் ஆகியோருடன் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.இதில் எஸ்.பி.ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 20, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

image

நாமக்கல் மக்களவைத்தேர்தல் 2024 தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட‌ ஆட்சித்தலைவர் ச.உமா‌ இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியரும்‌ தேர்தல் செலவின மேற்பார்வையாளருமான அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.

News March 20, 2024

நாமக்கல்லில் கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

image

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.20) தொடங்கியது, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர், ரமேஷ் என்பவர் காந்தி வேடத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் டெபாசிட் செய்த 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நோட்டுகளாக ஒரு பையில் போட்டு தோளில் சுமந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 20, 2024

நாமக்கல்லில் விநோதமான முறையில் வேட்பு மனுதாக்கல் 

image

மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாமக்கல் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நபராக வந்திருந்தார்.அவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையாக கட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு வந்திருந்தார்.சோதனைக்கு பிறகு காந்தியவாதி ரமேஷை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர்

News March 20, 2024

நாமக்கல் :அதிமுக வேட்பாளர் பயோ டேட்டா

image

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்தவர் ராஹா. எஸ் தமிழ்மணி(64). கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இவர் எண்ணெய் நிறுவனம் நடத்துகிறார்.
மனைவி – சகுமதி , மகன் – திலீபன், மகள் – யாழினி.
அதிமுகவின் நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.

News March 20, 2024

நாமக்கல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, நாமக்கல் எம்பி தொகுதியின் வேட்பாளராக தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

நாமக்கல் அருகே வாகனச் சோதனை

image

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட நுழைவாயில் பகுதியாக உள்ள வேலூா் காவிரி பாலம் அருகே வாகனச் சோதனைப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் நேற்று ஆய்வு செய்து, காவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

News March 20, 2024

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

நாமக்கல் தேர்தல் குறித்து சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்

image

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமையில்
பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமும் மற்றும் பேருந்து பயணிகளிடம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

error: Content is protected !!