India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மரவள்ளி பயிர்களுக்கேற்ற மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும் 12.08.24-ந் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்படக் கூடிய சாலை விபத்தினால் பாதிப்படைந்தவரை , பொன்னான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்ற உதவி புரிந்த தகுதியான நபர்களுக்கு, நற்கருணை வீரர்கள் விருதும் மற்றும் பரிசுத் தொகையும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, இன்று தெரிவித்துள்ளார்.

இன்று இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் அமைச்சர்கள் ம.மதிவேந்தன், KRNராஜேஷ்குமார் மாணவர்களுக்கு பற்று அட்டை வழங்கினர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை, வெண்ணிலா தம்பதிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து ஐந்து நாட்களே ஆன அந்த ஆண்குழந்தையை பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சி வீடியோக்களை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 24 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
24 ஏடிஎஸ்பிகள் எஸ்பிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில்
ஏடிஎஸ்பியாக இருந்த கணகேஷ்வரி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில், பரமத்தி பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது கணவர் முருகன் சாலை விபத்தில் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் ரிலையன்ஸ் தர மறுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. நேற்று மாலை விசாரணை முடிவில், முருகன் குடும்பத்தாருக்கு ரூ 22 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் சிறு ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் உமா பேசியதாவது, ஜவுளி தொழில் கட்டமைப்பு வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜவுளி பூங்கா அமைக்கவும், தொழில்முனைவோருக்கும் ரூ.2.50 கோடி வரை நிதியுதவி அரசால் வழங்கப்படவுள்ளது என்றார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதலமைச்சரின் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு முதல் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட விளையாட்டுதுறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ 500 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஜாதிமல்லி 360க்கும், முல்லைப்பூ 320க்கும், மஞ்சள் அரளி 200 ரூபாய் என பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மேலும் நாளை ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் இன்று மாலை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்செங்கோட்டில் நேற்று தேசிய கைத்தறி தின விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் முத்ரா கடன் திட்டத்தின் சார்பில் 73 நெசவாளர்களுக்கு ரூ.31.00 லட்சம் கடனுதவி மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.16.00 லட்சம் மதிப்பில் கடனுதவி உள்ளிட்ட 103 நெசவாளர்களுக்கு 52.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் உமா வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.