India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே, கறிக்கோழி விலை கிலோ ரூ.85 ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.82 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உட்பட ஊராட்சி நிர்வாகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

➤நாமக்கல் வழியே வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்
➤நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆக.13 மரவள்ளி கிழங்கு குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.
➤ நாமக்கல் மாவட்டத்தில் காலை 6மணி வரை 90.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
➤நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 175 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
➤நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அலங்காரம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொது நிதி, செலவினம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட் 12 தலைப்புகளில் விவாதம் நடைபெற்று பொதுமக்களுக்கு அலுவலர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று 11 மணியளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. துளசியால் அர்ச்சனை செய்த பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். வீட்டிலிருந்தே அனைவருக்கும் பகிருங்கள்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 2024- 2025-ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகள் கணிதம், இயற்பியல், தாவரவியல், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய 6 பாடப்பிரிவுகளில் 175 காலியிடங்கள் உள்ளன. இந்நிலையில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் உடனடியாக கல்லூரிக்கு வந்து இணையதளம் மூலம் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மங்களபுரம் 42.40 மி.மீ, நாமக்கல் 4 மி.மீ, புதுச்சத்திரம் 1மி.மீ, ராசிபுரம் 9.60 மி.மீ, சேந்தமங்கலம் 6 மி.மீ, திருச்செங்கோடு 6.50 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் வளாகம் 1.60 மி.மீ, கொல்லிமலை 19 மி.மீ என மொத்தம் 90.10 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேஷ் (25) – மோனிஷா (23). கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு மோனிஷா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மோனிஷா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் கலெக்டர் உமா கூறியதாவது “சாலை விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்ற உதவியர்களுக்கு நற்கருணை வீரர்கள் விருதும், மத்திய அரசால் ரூ.5,000, மாநில அரசால் ரூ. 5,000 என மொத்தம் ரூ.10,000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு உதவிய தகுதியானவர்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மரவள்ளி பயிர்களுக்கேற்ற மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும் 12.08.24-ந் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.