India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.37,000 – 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே <
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.10) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.82-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் ஆனங்கூர், தோக்கவாடி, கல்வி நகர், குப்புச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.12), மல்லசமுத்திரம், கவுண்டம்பாளையம், பாலமேடு, மங்களம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வேப்பநத்தம், கொசவம்பட்டி, முதலைப்பட்டி, முத்துகாப்பட்டி, பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஆக.13 என மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE)
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கான முட்டை விலையை நிர்ணயித்து வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 10) மாலை நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ரூ.4.75 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு, நாமக்கல் வழியாக சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. அதன் கட்டண விபரம், புறப்படும் நேரம் மற்றும் சென்று சேரும் நேர விபரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் -செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.10 ) நாமக்கல் – கபிலன் (9498178628 ), ராசிபுரம் – நடராஜ் ( 99442242611), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – கைலேஸ்வரன் ( 9498169273) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
நாமக்கல், வெப்படை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் நேற்று மாலை தனது 8 வயது மகனுடன்
மேட்டுக்கடை அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, பாறையில் தேங்கி இருந்த தண்ணீரில் கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாரா விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.