India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை 2024 தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது இதனிடையே நாமக்கல் பகுதியில் அமைந்துள்ள வங்கிகள் அமைப்புகள் சார்பில் தேர்தல் போஸ்டர்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் நகரில் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.
மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்ஜித் கவுர் அவர்கள் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வருகின்ற நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக மாவட்ட தலைமை தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தேர்தல் பணி சம்பந்தமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் மக்களிடையே எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும், கட்சி சாதனைகள் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சேலம் கோபி மருத்துவமனை (ம) ராசிபுரம் தனியார் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் (07-04-2024) ஞாயிற்றுக்கிழமை அன்று ராசிபுரம் மேட்டு தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இம்முகாமில் காய்ச்சல் கண்காணிப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
மக்களவை 2024 பொதுத்தேர்தலில் முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவ்வப்போது தற்காலிக சோதனைச் சாவடிகளுக்கு சென்று வாகன சோதனையிலும் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார் இதனிடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்த மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்ஜித் கவுர் ஆகியோர் முன்னிலையில் மக்களவைத் தேர்தல் 2024 தேவைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனைச் சாவடியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா காரை நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சோதனையின் போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா். நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குச்சாவடிகளில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள கா்நாடக மாநில காவல் துறையினா், துணை ராணுவத்தினா் 190 போ் வந்துள்ளனா்.
Sorry, no posts matched your criteria.