India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொடுமுடி அடுத்துள்ள ஊஞ்சலூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையத்துக்கு காவேரி ஆற்றில் பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஏழு மாதங்களாக காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால் பரிசல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்துக்கு பரிசல் பயணம் மீண்டும் தொடங்கி உள்ளது.

நாமக்கல்லில், 450 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு குறைத்து, 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வடமாநிலங்களில் விலை குறைக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்தில், கொள்முதல் விலை சரிந்துள்ளது. இரண்டு நாட்களில், 20 காசு குறைந்துள்ளது கோழி முட்டை பண்ணையார்களை கவலையடையச் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கட்சியினருக்கான பயிலரங்க கூட்டம் நாளை 23ஆம் தேதி நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநிலத் துணைத் தலைவர்கள் ராமலிங்கம் துரைசாமி மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் கமலாலய குளம் உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரி நடைபெற்று வந்த நிலையில், போதுமான பராமரிப்பு இல்லாததால் இடையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் குளம் பராமரிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமலாலய குளத்தில் படகு சவாரியை ராஜேஸ்குமார் எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி பூ கிலோவில் விலை நிலவரம்: கத்தரி ரூ.40, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.20, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.25, முருங்கை ரூ.50, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.25, பாகல் ரூ.48, பீர்க்கன் ரூ.40. இதனிடையே நேற்று 21ம் தேதி ஒரு கிலோ இஞ்சி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 22ம் தேதி ரூ10 விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பரமத்தி வேலூர் அருகே பொய்யேரி பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார். இவர் தனது மகனுடன் நேற்று இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென செந்திலுமார் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 5,517 பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 28 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,376 பேருக்கும், 2022-23-ம் ஆண்டில் 21 முகாம்களில் 1,480 பேருக்கும், 2023-24 – ஆண்டில் 15 முகாம்களில் 1,661 பேருக்கு என 5,517 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 நபர்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதார துறை மூலம் தேசிய குடற்புழு நீக்க முகாம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு 30.08.2024 அன்று நடைபெறவுள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

➤நாமக்கலில் கல்லூரி மாணவி பானுப்பிரியா மர்ம மரணம்.
➤பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலம்
➤நாமக்கல் பூங்கா சாலையில் புதிய பூங்கா திறப்பு
➤நாமக்கலில் முட்டை விலை பத்து காசு குறைந்து 4.40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
➤கொல்லிமலையில் அரசு தாலுக்கா மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்
➤மல்லசமுத்திரத்தில் ரூ.38 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் 21ஆம் தேதி காலை வரை பதிவான மழை அளவு விபரம் மங்களபுரம் 35 மிமீ, ராசிபுரம் 3.20 மிமீ, சேந்தமங்கலம் 1மிமீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 3 மிமீ, கொல்லிமலை செம்மேடு 19 மிமீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 61.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.