Namakkal

News August 12, 2025

நாமக்கல்: தொடர்ந்து உயரும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று(ஆக.11) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

News August 12, 2025

நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வசதி

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>‘TN nilam citizen portal’<<>> தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News August 12, 2025

நாமக்கல் மருத்துவமனையில் வேலை வேண்டுமா? CLICK NOW!

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’மருத்துவ நிர்வாக’அதிகாரி பயிற்சி நாமக்கல்லல் வழங்கப்படவுள்ளது. பயிற்சி தொடங்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. வேலை நிச்சயமாக வழங்கப்படும். உடனே விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>(SHARE IT)

News August 11, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.11 ) நாமக்கல் – வேதபிறவி ( 9498167158), ராசிபுரம் – கோமளவல்லி ( 8610270472), திருச்செங்கோடு – தவமணி ( 9443736199), வேலூர் – ஷாஜஹான் ( 9498167357) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 11, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்குப் பிறகு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.85 ஆக உள்ளது.

News August 11, 2025

திருமணத் தடை நீக்கும் எயிலிநாதர் கோயில்!

image

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். SHARE பண்ணுங்க!

News August 11, 2025

நாமக்கல்லில் (ஆக.15) மதுக்கடைகளை மூட உத்தரவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15.08.2025 அன்று சுதந்திர தின விழாவையொட்டி, அனைத்து இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), மதுக் கூடங்கள், மற்றும் FL 1, FL 2, FL 3, FL 3A, FL 3AA, FL 11 வரையிலான உரிமம் பெற்ற வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார்.

News August 11, 2025

நாமக்கல்: 8வது போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

நாமக்கல் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT!

News August 11, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 11, 2025

நாமக்கல் வரும் வெளியூர் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கல் ரயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பணிகள் மற்றும் வியாபார விஷயமாக வருபவர்கள் தங்கி செல்ல ஏதுவாக புதிதாக ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது . ஓய்வு அறை அமைக்கப்பட்ட பின் வெளியூர் பயணிகள் குறைந்த கட்டணத்தில் ரயில்வே நிலையத்திலேயே தங்கி ஓய்வெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!