India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் : வெண்ணந்துார் நடுப்பட்டி டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருபவர் கிருஷ்ணன்(46). இவர் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ செல்லத்துரை தலைமையிலான போலீசார் பாரில் ஆய்வு மேற்கொண்டு கிருஷ்ணன் மற்றும் அங்கு பணியாற்றிய மணிகண்டன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

நாமக்கல்லில் இன்று அக்டோபர் 7ஆம் தேதி, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ரூ.5.05 ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் நான்கு சக்கர வாகன இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.07 நாமக்கல்-(தேசிங்கன்- 8668105073) ,வேலூர் -(சுகுமாரன்- 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய www.sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ’Automative welding Machine Operator’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும்.
5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE)

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(அக்.6) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 398 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் மதுரை, தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, கொல்லம், கோட்டயம், சென்னை, பெங்களூரூ, மைசூர், சிமோகா, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கல்கத்தா, துர்காபூர், அசன்சோல், பரூனி போன்ற பகுதிகளுக்கு சென்றுவர ரயில்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ஆவினில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் ’Milk Collection, Accounting’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி பெருவோருக்கு ஆவினில் வேலைவாய்ப்பு நிச்சயம். விண்ணப்பிக்க<
Sorry, no posts matched your criteria.