India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் இன்று (ஜூலை 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜூலை-08 நாமக்கல் ராஜமோகன் 94422-56423, வேலூர் ரவி 94438-33538 – ராசிபுரம் கோவிந்தசாமி 94981-69110- திருச்செங்கோடு டேவிட் பாலு 94865-40373- திம்மநாயக்கன்பட்டி ரவி 94981-68665- குமாரபாளையம் ரகுநாதன் 97884-48891ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 08.07.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் கோவிந்தராசன் 94981 70004), ராசிபுரம் ஆனந்தகுமார் 94981 06533), திருச்செங்கோடு ராதா 94981 74333), வேலூர் ஷாஜகான் 9498167357), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நாளை கரூர் மற்றும் நாளை மறுநாள் நாமக்கல் மாவட்டங்களுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு அரசு ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நாமக்கல்: ராசிபுரத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் வல்வில் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தபோது அவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. இங்கு வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE IT!
நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வரும் ஜூலை 14-ம் தேதி முதல் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர 8வது படித்திருந்தால் போதும். மேலும் விபரங்களுக்கு 8825908170 தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகளில் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 9) மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களாக தற்போது மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே, நாளை நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழக்கம்போல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை(ஜூலை 9) முதல் வரும் திங்கள்கிழமை வரை
காலை 8: 30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயில், மாலை 5: 25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளன.
நாமக்கல்: தமிழ்நாட்டின் வேலையில்லா இளிஅஞர்களுக்கு திறன் பயிற்சி, ஊக்கத் தொகையுடன் ‘வெற்றி நிச்சயம்’ எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதில், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பயன்பெறலாம். தொலைதூரத்தில் இருந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம். அருகில் உள்ள மாவட்ட இ சேவை மையத்தையும் அணுகலாம். இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக். உடனே SHARE செய்யவும்
நாமக்கல் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக நாளை(ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபடி, நாமக்கல், நெல்லியாராயண், அய்யம்பாளையம், வெற்றிப்பட்டி, வையந்ததம், NGGO காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் ரத்து ஏற்படும். இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.