India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன உயர்நிலைப் பள்ளியில், சிவம் பவுண்டேஷன் சார்பாக சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பொத்தனூர் பிருந்தாவன் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.கிருஷாந்த், எல்.சுஷ்மிதா, ஒய்.பிரனீஷ், எஸ்.தரணிஷ் ஆகியோர் முதல் 5 இடங்களையும், எஸ்.யோகப்பிரியன், எஸ்.சாதனா, எஸ்.சுபிக்ஷா, எஸ்.கவின் ஆகியோர் 2ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களை தேசிய அளவிலான சிலம்பப் போட்டிக்கு தேர்வு செய்துள்ளனர்.

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆவணி மாத புதன்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மாநில அளவில் அமைப்பதை அடுத்து வாரியத்திற்கென அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பாக விண்ணப்பங்களை பெறும் பொருட்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் உடன் tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் தகவல்களுக்கு 04286-280230 தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி 6வது வார்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் அறை சுவரில் மனிதக் கழிவு வீசப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்களை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மனிதக் கழிவு வீசியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்

பாரா ஒலிம்பிக் போட்டி 2024ல் பெண்களுக்கான பேட்மிண்டன் SU5 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கும் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி துளசிமதி-க்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

குமாரபாளையத்தில் மேற்கு காலனி சேர்ந்த மும்தாஜ் என்பவர், தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், அக்கடனை அடைக்க முடியாமல் வந்துள்ளார். இதனையடுத்து கந்துவட்டி கும்பல், மும்தாஜை மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கொல்லிமலை பகுதியில் அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் வரும் காரணத்தால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அனுப்பி வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு செல்வோரை வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும் தொடர் மழை காரணமாக அருவியில் நீர் வரத்து மிகவும் அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 21ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளதாகவும் இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த அனைவருக்கும் இந்த வேலை முகாமில் கலந்து கொள்ளலாம் . தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில், மாதந்தோறும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், கோட்ட அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் குறைகள் நேரடியாக கேட்டு, தீர்வு காணப்படுகிறது. இந்த செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் கூட்டம் நாளை 4ம் தேதி, முதல் புதன்கிழமை காலை நடைபெறுகிறது.

நாமக்கல்லில் பள்ளி ஒருங்கிணைப்பாளர்க்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் உமா பேசுகையில் தற்போதைய காலத்தில், பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றை குழந்தைகளை அதிக செல்லம் கொடுத்து, குழந்தைகள் கேட்பதை உடனடியாக வாங்கி கொடுத்து, பணத்தின் அருமையை உணராத விதமாக வளர்த்து வருகின்றனர் என்று கலந்து கொண்டவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.