India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு அம்பேத்கர் நகர் அரசு துவக்கப்பள்ளியில், கடந்த ஞாயிறன்று பள்ளியில் அசுத்தம் செய்த சமூக விரோதிகளை காவல்துறை கைது செய்திடவும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். பள்ளி பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (e-Shram Portal)-ல் பதிவு செய்து குடும்ப அட்டை இல்லாதவர்கள் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகங்களில் இதற்கான உரிய படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ச.உமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் இராஜேஸ்குமார் தலைமையில்
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவைக் கூட்டம் இன்று நாமக்கல் மாநகராட்சி கட்டிடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

நாமக்கல் நகர ஷராப் & நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நிர்ணயம் செய்யப்பட்ட இன்றைய (05.09.2024) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.53360 ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.6670 முத்திரை காசு 1 பவுன் ரூ.54400 முத்திரை காசு 1 கிராம் ரூ.6800 ஒரு கிராம் வெள்ளியின் விலை: ரூ.90க்கும் விற்பனை ஆகி வருகின்றது. சேதாரம், கூலி, GST வரி தனி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இங்கு இன்று 11 மணி அளவில் பலவகை வாசனை திரவியங்கள் கொண்டுஅபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின், முதுகலை தமிழாசிரியர் நந்தக்குமார் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு அரசு பள்ளி மாணவர்களின் பள்ளிச்சீருடையில் வந்திருந்தார். இதனை பார்த்த மாணவ மாணவிகள் ஆசிரியரின் நெகிழ்ந்து போனார்கள். மற்ற ஆசிரியர்களும் ஆசிரியர் நந்தகுமாரை பாராட்டினர்.

சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து முதலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொழுது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பேருந்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானர். அப்போது, ராசிபுரம் சென்று விட்டு அவ்வழியாக வந்த நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், உடனடியாக இறங்கி உதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த மூன்று நாட்களாக 4.70 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் நேற்று மாற்றம் செய்தார். அப்போது 10 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களின் முட்டை விலை உயர்ந்துள்ளதால், அதனை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. அந்தகவையில், நாமக்கல் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர், தனியார் பள்ளியில் ஒருவர் என மொத்தம் 9 பேர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (e-Shram Portal)-ல் பதிவு செய்து குடும்ப அட்டை இல்லாதவர்கள் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகங்களில் இதற்கான உரிய படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ச.உமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.