Namakkal

News September 8, 2024

நாமக்கல் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்ட இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது . இதில் மாவட்ட இரவு ரோந்து அதிகாரி இமயவரம்பன், காவல் துணைக் கண்காணிப்பாளர்- 9498230141 உட்கோட்டம் நாமக்கல்: கபிலன் காவல் ஆய்வாளர்- 9498178628, இராசிபுரம்: செல்வராஜன், காவல் ஆய்வாளர்- 9498158595, திருச்செங்கோடு: முருகேசன், காவல் ஆய்வாளர்- 9498133890 வேலூர்: ராதா காவல் உதவி ஆய்வாளர்- 9498174333 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

News September 8, 2024

நாமக்கல்: குமாரபாளையம் சாலை மூடல்

image

குமராபாளையம் முதல் திருச்செங்கோடு ஆனங்கூர் வழியாக செல்லும் சாலையில் இருக்கும் ரயில்வே பாதையில் மின்சார கேட் அமைப்பதால், ஆனங்கூர் இரயில்வே கேட் (10.09.2024) காலை 6 மணி முதல் (12.09.2024) மாலை 6 மணி வரை 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும். எனவே, பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 8, 2024

நாமக்கல்லில் காய்கறி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.50, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.18, அவரை ரூ.72, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.35, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.40 மற்றும் பீர்க்கன் ரூ.38. இதனிடையே நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில். இன்று ரூ.10 விலை குறைந்து ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டது

News September 8, 2024

பாமக தலைவர் அன்புமணிக்கு அழைப்பிதழ்

image

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கந்தசாமி கண்டார் கலை கல்லூரியில் வரும் 11ஆம் தேதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழா அழைப்பிதழை நேற்று இரவு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், தமிழ்நாடு உழவர் பேரியக்க துணைத் தலைவர் பொன் ரமேஷ், சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட துணைத் தலைவர் தினேஷ் பாண்டியன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்தினருடன் இணைந்து வழங்கினர்.

News September 8, 2024

நாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

image

நாமக்கல் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் 10,11,12 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இதில் இறகுபந்து, கால்பந்து, கபடி, செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு திடலிலும், தடகளம் கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.உமா நேற்று தெரிவித்துள்ளார்.

News September 8, 2024

நாமக்கல்: பாம்பு கடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு

image

நாமக்கல்: எருமப்பட்டி பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நந்தினி. இவர் நாமக்கல் ராமலிங்கம் மகளிர் கல்லுாரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பூந்தோட்டத்திற்கு பூ பறிக்க சென்றபோது பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதையடுத்து நாமக்கல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 7, 2024

நாமக்கல் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாமக்கல்லை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நாமக்கல் மாநகராட்சி நிர்வாக ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேயருக்கான அங்கி, 5 அடி உயர செங்கோல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் வரும் 16 அல்லது 17-இல் மன்றக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

News September 7, 2024

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

வேளாண்மை துறையின் சார்பில் நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள சிறப்பு மண் பரிசோதனை முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வரும் 11ஆம் தேதி ராசிபுரம் நடுப்பட்டியிலும் 18ந் தேதி திருச்செங்கோடு ஏமப்பள்ளியிலும் 25ந் தேதி மோகனூர் வளையப்பட்டியிலும் நடைபெற உள்ளது.

News September 7, 2024

நாமக்கல் ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்ட இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது . மாவட்ட இரவு ரோந்து அதிகாரி விஜயகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர்- 9498104763, உட்கோட்டம் நாமக்கல்:
கோவிந்தராசன், காவல் ஆய்வாளர்- 9498170004, இராசிபுரம்: கோமலவள்ளி, காவல் ஆய்வாளர்- 8610270472, திருச்செங்கோடு: வெங்கட்ராமன், காவல் ஆய்வாளர்- 94981 69273, வேலூர்: கங்காதரன், காவல் உதவி ஆய்வாளர்- 9498172040.

News September 7, 2024

நாமக்கல்லில் உணவுத் திருவிழா ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்வாதார கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் நடைபெறும் இயக்கம் இரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா 322 ஊராட்சிகளிலும் வரும் 9 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்துக் கொள்ளுமாறு மாவட்ட மருத்துவர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!