India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் சேலம் சாலையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர் சங்க நிறுவனம் உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கேஸ் டேங்கர் லாரிக்கு நிலுவைத் தொகை வழங்காத ஆயில் நிறுவனத்தை கண்டித்து கடந்த மூன்று நாட்களாக lpg டேங்க் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதை அடுத்து ஆயில் நிறுவனங்கள் நிலுவை தொகை தருவதாக ஒப்புக்கொண்டதால் எல்பிஜி டேங்க் லாரிகள் ஸ்ட்ரைகை வாபஸ் பெற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 17.09.2024 மிலாடிநபி தினத்தினை முன்னிட்டு இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடப்பட வேண்டும் என ஆட்சியர் ச.உமா அறிவித்துள்ளார். மேற்கண்ட நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் இன்று நடைபெற உள்ள குரூப்-2 முதல்நிலை போட்டித்தேர்வை 22,277 பேர் எழுதுகிறார்கள். நாமக்கல் தாலுகாவில் 10, 742 பேரும், ராசிபுரம் தாலுகாவில் 6,093 பேரும், திருச்செங்கோடு தாலுகாவில் 5,442 பேரும் என மாவட்டத்தில் 22, 277 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களை கண்காணிக்க 73 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதியகுடும்ப அட்டை கோருதல், கைபேசிஎண் பதிவு உள்ளிட்டவைகள் மேற்கொள்ள பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்நாள் முகாம் இன்று (செப்-14) நாமக்கல் ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை 8.5 கிலோமீட்டர் தொலைவில் மாற்றி அமைக்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படும் நகராட்சியின் ஊழல் குறித்து முழு விசாரணை நடத்த பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாசு அறிக்கை வெளியிட்டார்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 17.09.2024 அன்று மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும், 16.09.2024 (திங்கள் கிழமை) கல்லூரி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு அதனை, ஈடுசெய்யும் வேலைநாள் பின்னர் தெரிவிக்கப்படும். விடுமுறைக்குப் பிறகு கல்லூரி 18.09.2024 (புதன் கிழமை) மீளத் திறக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கடைவீதி அருகே அமைந்துள்ள பலபட்டறை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் வருகை புரிய உள்ளனர் இதனால் நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் சாலை முதல் பேருந்து நிலையம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2024 தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். விதி எண் 84 மற்றும் இதர விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி இ-சேவை மையங்கள் மூலம் இணையதளம் வழியாக வரும் 11.10.2024-குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் தலைமையிடம் ஆக கொண்டுள்ள எல்பிஜி டேங்க் லாரி நிறுவன சங்க தலைவர் சுந்தர்ராஜன் இன்றைய வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கர்நாடகா மாநிலத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காமல் இருக்கின்றனர். இதனை கண்டித்து எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் அறிவித்துள்ளனர். இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாத என தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை காலை மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக மேலும் இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.