India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டு, அவசர தேவைக்காக 330 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிக்கு 1077 என்ற 24 மணி நேரமும் செயல்படும் எண்ணிலும், டிஎன் – ஸ்மார்ட் செயலியை பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. புரட்டாசி புதன்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாமக்கலில் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 2024-2025 அம் ஆண்டுக்கான படிவத்தை நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக பெற்று 31/10/2024 க்குள் அளிக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 9ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம் மங்களபுரம் 4.80 மிமீ மோகனூர் 31 மிமீ நாமக்கல் 6.75 மிமீ பரமத்திவேலூர் 11 மிமீ ராசிபுரம் 1 மிமீ சேந்தமங்கலம் 1 மிமீ திருச்செங்கோடு 3 மிமீ நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 13.50 மிமீ கொல்லிமலை செம்மேடு 18 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 89.05 மிமீ மழை பதிவாகி உள்ளது.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 9ம் தேதி காய் கனி பூ விலை நிலவரம் கத்தரி ரூ 38 முருங்கை ரூ 65 தேங்காய் ரூ 50 எலுமிச்சை ரூ 90 சின்னவெங்காயம் ரூ 45 பெரியவெங்காயம் ரூ 64 பீன்ஸ் ரூ 115 கேரட் ரூ 60 பீட்ரூட் ரூ 48 உருளை ரூ 48 இதனிடையே நேற்று 8ம் தேதி ஒரு கிலோ வெண்டை ரூ25க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 9ம் தேதி ரூ5 விலை உயர்ந்து ஒரு கிலோ வெண்டை ரூ 30 க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு வரும் 22ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுபோட்டி நடக்கிறது என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கும் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04286-292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவினர், நாமக்கல் பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டடத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நாமக்கல் பூங்கா சாலையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இதில் அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் உள்ளது இங்கு 57 கடைகள் இரண்டு ஹோட்டல் மூன்று கட்டண கழிப்பிடம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் இருக்கும் இடம் ஏலம் விடப்பட்டது இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூபாய் 4 கோடி வருவாய் வந்துள்ளதாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், நேற்று நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில் வரும், 15இல் நாமக்கல் மாநகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.