Namakkal

News October 21, 2024

நாமக்கல் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை

image

நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்.22ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வர உள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 21ஆம் தேதி பிற்பகல் முதல் 22ஆம் தேதி இரவு வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

புதன் சந்தையில் துணை முதல்வருக்கு உற்சாகமாக வரவேற்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் இன்று சேலத்தில் இருந்து செல்லும் வழியில், நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே சாலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் அணியினர் என வழிநெடுக திரண்டு நின்று துணை முதலமைச்சரை உற்சாகத்தோடு வரவேற்றனர்.

News October 20, 2024

மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம் அறிவித்த மாவட்ட எஸ்பி

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்களின் விவரம். நாமக்கல் – கபிலன் (9498178628), இராசிபுரம் – நடராஜன் ( 9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – கைலேஷ்வரன் (9498169273) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News October 20, 2024

நாமக்கல்லில் முட்டை விலை நிலவரம்

image

ஐப்பசி மாதம் தொடங்கி முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று முடிவுற்றது நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி ஐப்பசியில் முட்டை நுகர்வு சற்று குறையும் என்பதால் விலையும் சற்று குறையும் என கருதப்பட்டது.  முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ரூ.5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

News October 20, 2024

துணை முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய ஆட்சியர் 

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் அடங்கிய நினைவு பரிசினை வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News October 20, 2024

முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம்

image

நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் முதல்வர் அக்.22 ஆம் தேதி நாமக்கல் வருகை தருவதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒருநாள் சிரமமின்றி காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு நாமக்கல் காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

மறு வாழ்வு இல்லங்கள் பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு

image

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் ஆகியோர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யப்படவில்லையெனில் சீல் வைக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

நாமக்கல் முட்டை விலை நிலவரம்

image

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி-ஐப்பசி மாதத்தில் முட்டை நுகர்வு சற்று குறையும் என்று கருதப்பட்டது. எனினும், முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ரூ 5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

News October 19, 2024

நாமக்கல் மாவட்ட ரோந்து அலுவலர் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். இராசிபுரம் – ஆனந்தகுமார் (94981065533), – நாமக்கல்- வேதபிரவி(9498167158), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – ரவிச்சந்திரன் (9498169276) ஆகிய காவல் ஆய்வாளர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News October 19, 2024

நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

image

நாமக்கல் நகரப் பகுதிக்கு வருகின்ற 22ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். அதனால் அன்று காலை முதல் மாலை வரை நாமக்கல் நகரப் பகுதிக்குள் லாரிகள் மற்றும் பேருந்துகள் மாற்று பாதையில் செல்ல வேண்டுமென நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் பிரதான சாலை வழியாக வந்து மீண்டும் பைபாஸ் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

error: Content is protected !!