Namakkal

News March 22, 2024

வீடியோ சர்ச்சை:நாமக்கல்லில் திமுக வேட்பாளர் மாற்றம்

image

நாமக்கல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சூரியமூர்த்தி நேற்று இரவு திடீரென மாற்றப்பட்டார். இதனையடுத்து அதே கட்சியை சேர்ந்த மாதேஸ்வரன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது

News March 21, 2024

நாமக்கல்: கொடுத்த வனத்துறை

image

உலக காடுகள் தண்ணீர் தினங்களை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை கல்லூரி சுற்றுச்சூழல் பசுமை மன்றங்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வனத்தில் தீ பரவினால் உடனடியாக தகவல் தர வேண்டும் எனவும் விலங்கு மனித மோதல் குறித்தும் பேசப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் வனத்துறையினர் உள்ளிடோர் விழாவில் பங்கேற்றனர்.

News March 21, 2024

நாமக்கல்: 24/7 தயார் நிலையில் அதிகாரிகள்

image

மக்களவைத் தேர்தல் 24 நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் 24/7 நடைபெற்று வருகிறது நாமக்கல் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாமக்கல்லில் கல்லூரி மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நடைபெற்றது மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மரு.ச.உமா கலந்து கொண்டார்.

News March 21, 2024

நாமக்கல்: வீடியோ ரிலீஸ் செய்த ஆட்சியர்

image

2024 மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை விதிகள் அமலாகி உள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்களிக்க வேண்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் 2024 தேர்தல் தொடர்புடைய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

News March 21, 2024

நாமக்கல் தேர்தலுக்கு நவீன மின்னணு வாகனம் தயார்

image

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 24ல் 100 சதவிகித வாக்குபதிவு நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நவீன மின்னணு வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட உள்ளது.

News March 21, 2024

நாமக்கல்: 100/100 களம் இறங்கிய ஆட்சியர்

image

நாமக்கலில் 19ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் மக்களவைத் தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

நாமக்கல் வந்த அர்ஜுன் பானர்ஜி

image

மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்துள்ளது இந்நிலையில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜுன் பானர்ஜி உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் நுண் பார்வையாளர்கள் ஆகியோருடன் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.இதில் எஸ்.பி.ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 20, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

image

நாமக்கல் மக்களவைத்தேர்தல் 2024 தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட‌ ஆட்சித்தலைவர் ச.உமா‌ இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியரும்‌ தேர்தல் செலவின மேற்பார்வையாளருமான அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.

News March 20, 2024

நாமக்கல்லில் கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

image

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.20) தொடங்கியது, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர், ரமேஷ் என்பவர் காந்தி வேடத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் டெபாசிட் செய்த 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நோட்டுகளாக ஒரு பையில் போட்டு தோளில் சுமந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!