India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் அருள்மிகு ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நாமகிரி தாயார் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர். தேர் வலம் வரும் வீதிகளில் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.
வரும் ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையும், நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு மையமும் இணைந்து ‘வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘யினை கல்லூரி வளாகத்தில் 26/03/24 நடத்தியது.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன காந்தியவாதி ரமேஷ் போட்டியிடுகிறார். தனது தேர்தல் செலவுக்கு தன்னால் முடிந்ததை செலவு செய்து வருவதாகவும் தேர்தலுக்கு கூடுதலாக பணம் தேவைப்படுவதால் பொது மக்களாகிய நீங்கள் என் தேர்தல் செலவுக்கு பணம் தர கோரியுள்ளார். இதற்காக தனது கூகுள் பே 9994176591 எண்ணையும் சமுக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார் தற்போது இது பேச்சு பொருளாகி உள்ளது.
மக்களவை 2024 தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி
வாக்குப்பதிவு நடைபெறும் நாளும், முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோடு வேட்பாளராக அல்லது தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தகவல் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இண்டியா கூட்டணி மற்றும் திமுக கூட்டணி கட்சி கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.வி.மாதேஸ்வரன் இன்று 25.03.2024 நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப. அவர்களிடம் வேட்புமனு தாக்கல் வழங்கினார். இதில் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கான முதல் பயிற்சி முகாம் நேற்று காலை 9.30 முதல் மாலை 5 வரை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. உமா அவர்கள் தலைமையில் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டனர். இந்த முகாமில் வாக்காளர் பெயரை சரிபார்த்தல், ஓட்டு எந்திரத்தை கையாளும் விதம் போன்றவற்றை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்சியினரின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட, வண்ணங்களில் துண்டுகள் மற்றும் மப்பிளர்கள் தயாரிக்கும் பணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் அரசியல் கட்சியின் சின்னங்களும் பொறிக்கப்பட்டு உள்ளது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சித்திரம் பவுண்டேஷன் வாசன் ஐ கேர் மணிபால் ஹாஸ்பிடல் சார்பாக இலவச பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து ஆலோசனை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் ராஜேஷ் கார்த்திகேயன்,பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.