India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1. கண்காணிப்பு கேமாரா பதிவுகளை ஆய்வு செய்த எஸ்.பி
2. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
3. தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்
4. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை
5. பரமத்தி வேலூர் அருகே தீ விபத்து
6. ராசிபுரம் GH-ஐ சூழ்ந்த மழை வெள்ளம்
7. நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), இராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (9498230141), வேலூர் – முருகேசன் (9498169600) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று (31.10.2024) மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். SHARE IT!

1.நாமக்கல் மார்க்கெட்டில் மல்லிகை ரூ.1,200 விற்பனை செய்யப்பட்டது.
2.பரமத்தியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
3.புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்.பி. ராஜேஷ்குமார்
4. நாமக்கல் முட்டையின் விலை, ஐந்து காசு உயர்த்தி ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
5.நாமக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி (13/10/2024) அன்று பேச்சிப்போட்டி அறிவிப்பு

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 30ந் தேதி நடைபெற்றது. இப்போது முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் வெளி நிர்ணயம் செய்யப்பட்டது. குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்ததால் விலையும் இருந்து கொண்டே செல்கிறது. நேற்று 29ந் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.35க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் பூ மார்க்கெட்டில், சுற்றுவட்டார விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதன்படி இன்றைய பூக்கள் விலை விவரம், மல்லிகை ரூ.1,200, முல்லை ரூ.900, அரளி ரூ.180, சம்மங்கி ரூ.100, மஞ்சள் அரளி ரூ.250, செவ்வரளி ரூ.250, ஜாதிமல்லி ரூ.500, காக்கட்டான் ரூ.600, நந்தியாவட்டம் ரூ.240 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பூக்கள் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் கலந்து பேசினர். இதையடுத்து ரூ.5.30க்கு விற்ற முட்டையின் விலை, ஐந்து காசு உயர்த்தி ரூ.5.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி (13/10/2024) அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/தனியார் பள்ளி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெறுகிறது. மேலும், விவரங்களுக்கு எண். 04286-292164 தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

1. நாமக்கல்லில் 2025 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
2. வெண்ணந்தூரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
3.பாலப்பட்டியில் புதிய ரேஷன் கடையை மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் திறப்பு.
4.நாமக்கல்லில் நெல் பயிர்களை பாதுகாக்க வேளாண்மை துறை சார்பாக அறிவுரை
5.புதிய பேருந்து நிலையத்தில் ரூ 6.51 கோடி வருவாய்
Sorry, no posts matched your criteria.