Namakkal

News November 2, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.நாமக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
3.பலப்பட்டரை மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்
4.ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை
5.தீபாவளி பண்டிகையில் நாமக்கல் மாவட்ட முழுவதும் 38 பேர் மீது வழக்கு பதிவானது.

News November 2, 2024

நாமக்கல் மாவட்ட முழுவதும் 38 பேர் மீது வழக்கு

image

நாமக்கல் ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்த காரணத்தாலும், அதிகம் சத்தம் எழப்பும் பட்டாசுகளை வெடித்த காரணத்தாலும், நாமக்கல் மாவட்டம் முழுதும் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நாமக்கல்லில் 10 பேர், திருச்செங்கோடு 9, ராசிபுரம் 6 என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

News November 2, 2024

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

image

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சனிக்கிழமை முதல் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. இந்த விழாவையொட்டி, ஒரு வாரத்துக்கு பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவர். மேலும், வரும் 7-ஆம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு யாகங்களும், இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன. மறுநாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

News November 1, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் 132 மிமீ மழை பதிவு ஆனது.
2.இராசிபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
3.நாமக்கல் பரமத்தி சாலையில் தியாகராஜ பாகவதர் 65 வது நினைவு நாள் கொண்டாட்டம்
4.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.
5.சத்குரு ஜீவாலயத்தில் அமாவாசை பூஜை
6.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

News November 1, 2024

நாமக்கல் மாவட்ட ரோந்து அலுவலர் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். இராசிபுரம் – விஜயகுமார் கோமலவள்ளி 8610270472, நாமக்கல்- கபிலன் 9498178628, திருச்செங்கோடு – நந்தகுமார் 9498170006, வேலூர் – ஷாஜகான் 9498167357 ஆகிய காவல் ஆய்வாளர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்தார்

News November 1, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 132 மிமீ மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்: குமாரபாளையம் 9.20 மிமீ, மங்களபுரம் 6.60 மிமீ, நாமக்கல் 8 மிமீ, பரமத்திவேலூர் 10.50 மிமீ, ராசிபுரம் 72 மிமீ, திருச்செங்கோடு 1 மிமீ, ஆட்சியர் அலுவலகம் 8 மிமீ, கொல்லிமலை செம்மேடு 17 மிமீ என மொத்தம் 132.30 மிமீ மழை பதிவாகி உள்ளது என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கூறப்பட்டுள்ளது.

News November 1, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 132 மிமீ மழை பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்: குமாரபாளையம் 9.20 மிமீ, மங்களபுரம் 6.60 மிமீ, நாமக்கல் 8 மிமீ, பரமத்திவேலூர் 10.50 மிமீ, ராசிபுரம் 72 மிமீ, திருச்செங்கோடு 1 மிமீ, ஆட்சியர் அலுவலகம் 8 மிமீ, கொல்லிமலை செம்மேடு 17 மிமீ என மொத்தம் 132.30 மிமீ மழை பதிவாகி உள்ளது என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கூறப்பட்டுள்ளது.

News November 1, 2024

நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

image

என்சிசி மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம், ஈரோடு 15வது பட்டாலியனின் கமாண்டிங் அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 360 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முகாமில் பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடுதலில் 8 மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.

News November 1, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்துறை, மீன்வளம், மீனவர் நலத்துறை, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து, ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக பயிற்சி அளிக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். www.fisheries.tn.gov.in-ல் கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

News November 1, 2024

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

image

இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி புனித சேவியர் குழந்தைகள் இல்லத்தில் இனிப்பு மற்றும் காரம் வழங்கி குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா அவர்கள் கொண்டாடினார். 

error: Content is protected !!