India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மின்சார பம்ப்செட்டுக்கு மொபைல் போன் மூலம் இயக்கப்படும் தானியங்கி பம்ப் கன்ட்ரோலர்/ ரிமோட் மோட்டார் ஆபரேட்டர் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. திருச்செங்கோடு மற்றும் நாமக்கல்லில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கூடுதல் விவரங்களை பெற்று பயனடையுமாறு ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் அவர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா தனது கணவருடன் கலந்துகொண்டு சாட்டையடி வாங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார். இதே போல ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை அம்மன் கோவிலுக்கு வந்து நிறைவேற்றி செல்கின்றனர்.

நாமக்கல் ஏ எஸ் பேட்டை பகுதியில் இன்று இரவு குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய டிரைவர் பொதுமக்களால் பிடித்து தர்ம அடி கொடுக்கப்பட்டது. இவர் ஒரு கார் ஐந்து பைக்குகளை இடித்துவிட்டு தப்ப முயன்றார். பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – கோவிந்தராஜன் (9498170004), இராசிபுரம் – கோமலவள்ளி (8610270742), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – செல்வராஜ் (9498153088) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மண்டல அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் 9ஆம் தேதி சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் 04286-280019 என்ற தொடர்பு எண்ணில் தகவல் பெற்று பயன்பெற ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தெரிவிக்க, நாமக்கல் மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-599-7990 வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள குறைகளைச் சரிசெய்யவும், வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்புகள் உள்ளதை சரிசெய்யவும், தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு குறைகளை பதிவு செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்ட வேளாண் துறை சார்பில், நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு மண் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன. அந்த வகையில் நவ.6ல் நாமகிரிப்பேட்டை வட்டாரம் மூலபள்ளிப்பட்டியிலும், நவ.13ல் பள்ளிபாளையம் வட்டாரம் காடச்சநல்லூரிலும், நவ.20ல் புதுச்சத்திரம் வட்டாரம் எஸ்.ஊடுப்பம், நவ.27ல் கபிலர்மலை வட்டாரம் சோழசிராமணியிலும் சிறப்பு மண் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன.

நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மின் செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரத்துறை சார்பாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இவை புதன்கிழமை 6ஆம் தேதி பள்ளிபாளையம், 16ஆம் தேதி திருச்செங்கோடு, 20ஆம் தேதி பரமத்தி வேலூர், 13ஆம் தேதி ராசிபுரம், 27ஆம் தேதி ஆகிய பகுதிகளில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களாக விலை குறையாமலும் உயராமலும் தொடர்ந்து இதே நிலையில் மாற்றமில்லாமல் நீடிக்கிறது. மழை, குளிர் உள்ளிட்ட காரணங்களால் மேலும் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.