India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்ததையடுத்து இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நாமக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கனமழை உள்ளிட்ட பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மூலம் தெரிவிக்கலாம். மேலும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் நடைபெற்ற மழை தொடர்பான முன்னெச்சரிக்கை கூட்டத்தில் ஆட்சியர் ச.உமா தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 17.5.24 முதல் 19.5.24 வரை பலத்த மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தயார் நிலை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு அடுத்த எஸ் கே வி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் கோல்டன் ஹார்ஸ் ரவி திருச்செங்கோடு பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார். அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்
திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் மகளிர் கல்லூரி நிறுவனமான விவேகானந்தா கல்லூரி நிறுவனத்தில்வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது காலை 6:00 மணி முதல் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.மாணவியர் சேர்க்கை நடைபெறும் நிலையில் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா மருத்து கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய கல்வி நிறுவனத்தில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. சேலம் , கோவையை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி வளாகத்தில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோகனூர் 9 செ.மீட்டரும், நாமக்கல் AWS பகுதியில் 3 செ.மீட்டரும், புதுச்சத்திரம் பகுதியில் 2 செ.மீட்டரும், மங்கலபுரம் பகுதியில் 1 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சமீபமாக மழைபொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமாரபாளையம் அருகே சாணாங்காட்டு தோட்டம் பகுதியில் இன்று காலை தனது விவசாய நிலத்தில் சரஸ்வதி (50) என்பவர் யூகலிப்டஸ் மரத்தின் மேல் மின் கம்பிகள் மோதுவதை எடுத்துவிட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அவரை தடுக்க சென்ற அவரது கணவர் தங்கவேல் (58) மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் தேவையற்ற வதந்திகளையும் மற்றும் தேவையற்ற போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் சமூக வலைதளத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
மக்களவைத் தேர்தல் நாமக்கல் மாவட்ட வாக்கு எண்ணும் மையயமான திருச்செங்கோடு, எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளையும் மையத்தினையும் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.