India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம். எருமப்பட்டி 5 மி.மீ, மோகனூர் 7 மி.மீ, திருச்செங்கோடு 4.80 மி.மீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1.50 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 18.30 மி.மீ மழை பதிவாகி உள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் (ம) குமாரபாளையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதன் காரணமாக ஏற்பட்ட குளிர், இதனால் முட்டையின் நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையில் நீடித்தது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக ஏ.எஸ்.பி அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), இராசிபுரம் – அம்பிகா (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட ஏ.எஸ்.பி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை அமைப்பு சார்பாக, நாமக்கல் தெற்கு மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மேலாண்மை காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய், முள்ளங்கி, நீண்ட அவரை உள்ளிட்ட காய்கறிகள், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மூலம் பள்ளி சத்துணவு சமைப்பதற்காக இன்று வழங்கப்பட்டது.

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஐப்பசி மாத புதன்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று மதியம் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் நேரில் கொடுக்கலாம் என முன்னாள் படைவீரர் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகர் பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை அமைந்துள்ளது இன்று உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 35, அவரை 70 முதல் 90 வரை முள்ளங்கி 40 புடலங்காய் 36 பீர்க்கன் காய் 60 வாழைக்காய் 40பரங்கிகாய் 20 சுரைகாய் 5 – முதல் 15 வரை மாங்காய் 60 தேங்காய் 44 எழும்பிச்சை 50 என இன்று உழவர் சந்தையில் விற்பனை நடைபெற்று வருகின்றன.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏதும் இல்லாததால், இங்கும் விலையில் தற்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.40-ஆக நீடித்து வருகிறது.

நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு கட்டணம் இல்லாமல் தொலைபேசி எண் 18005997990 வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெரு விளக்கு சரியாக இயங்கவில்லை, குப்பைகள் அல்லது தண்ணீர் வரவில்லை, பொதுக் கழிப்பிடம் பிரச்சினை, கழிவுநீர் பிரச்சனை போன்ற அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக கட்டணம் இல்லாமல் அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து மாநகராட்சி வலுப்படுத்த அனைவரும் ஒன்றுபடுவோம்.
Sorry, no posts matched your criteria.