India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கான முதல் பயிற்சி முகாம் நேற்று காலை 9.30 முதல் மாலை 5 வரை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. உமா அவர்கள் தலைமையில் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டனர். இந்த முகாமில் வாக்காளர் பெயரை சரிபார்த்தல், ஓட்டு எந்திரத்தை கையாளும் விதம் போன்றவற்றை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்சியினரின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட, வண்ணங்களில் துண்டுகள் மற்றும் மப்பிளர்கள் தயாரிக்கும் பணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் அரசியல் கட்சியின் சின்னங்களும் பொறிக்கப்பட்டு உள்ளது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சித்திரம் பவுண்டேஷன் வாசன் ஐ கேர் மணிபால் ஹாஸ்பிடல் சார்பாக இலவச பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து ஆலோசனை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் ராஜேஷ் கார்த்திகேயன்,பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் ஏப் 19ல் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அந்த அழைப்பிதழில் உள்ள க்யூ. ஆர் கோடு ஸ்கேன் செய்தால் வாக்காளர்களின் வாக்குச்சாவடி அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளது
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும், சமவாய்ப்பு மன்றமும் இணைந்து ‘பெரியார் – வைக்கம் போர் வீரர்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இதில் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை க.பாரதி கலந்து கொண்டு மாணவியரிடையே உரையாற்றினர்.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் குளிர்ச்சியான தண்ணீரை பெருவதில் அதிக ஆர்வம் காட்டுவர் இதற்காக நாமக்கல்லில் மண் பானை விற்பனை தொடங்கியுள்ளது ரூ.150 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. மானாமதுரை திருச்சியில் இருந்து கொண்டு வந்து நாமக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதால் பானை விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரி நாகராஜன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் இன்று ஒப்படைத்தனர். இதுகுறித்தது போலீசார் விசாரிக்கின்றனர்.
பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நினைவு தின நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்றது. பகத்சிங் வரை படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. செங்கோட்டைக்கு முருகேசன் மாதேஸ்வரி ஜெயபால் கோவிந்தசாமி மாணிக்கம் அய்யனார் மகாலிங்கம் காளியப்பன் மணி ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோட்டின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே, சங்ககிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்லாஸ் ரெடிமேட் கடையிலும், ஸ்மார்ட் மொபைல் கடையிலும் கடையை உடைத்து கல்லாவில் இருந்த பணம் நேற்றிரவு திருடபட்டுள்ளது . சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவில் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளதால் விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தையும் 04286 233079 எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் அலுவலர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.