India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் பணம் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார். அப்போது, கடந்த தேர்தலில் 303 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தோம். இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றார்.
திமுக, காங்கிரஸ் குடும்பத்திற்காக உழைக்கிறது. பாஜக நாட்டிற்காக உழைக்கிறது .ராணுவ தளவாடங்களை நாமே தயாரித்து பயன்படுத்தி வருவதாக கூறினார்.
அமைச்சர் மதிவேந்தன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து அப்ப நாயக்கன்பட்டி,போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் ராசிபுரம் ஒன்றிய சேர்மன் ஜெகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மரு கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாமக்கல்லில் “ரோடு ஷோ” மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக டிஐஜி உமா தலைமையில் நேற்று இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் உடன் இருந்தார்.
நாமக்கல், ராசிபுரம் அருகே மல்லூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தில் சோதனை செய்த போது, 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7.86 கோடி ஆகும்.
மக்களவைத் 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா இன்று (7.4.2024) பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா (7.4.24) நாமக்கல் – கரூர் மாவட்ட எல்லையில் உள்ள பரமத்தி வேலூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு சோதனை சாவடி வழியாக வருகை தந்த அனைத்து வாகனங்களை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும், கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாமக்கல்லில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் காலை 9 மணிக்கு நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள நான்கு தியேட்டர் முன்பு தொடங்கி பேருந்து நிலையம் வரையில் மக்களைச் சந்திக்கும் வகையில் திறந்த வாகனத்தில் நின்றபடி அவா் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
Sorry, no posts matched your criteria.