India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 4 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தேர்வினை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 1197 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர், இதில் 580 தேர்வர்கள் போட்டித் தேர்வினை எழுதினர். 307 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தாட்கோ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்- இடைநிலை, நிறுவன செயலாளர்- இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் www.tahdco.com இணையதளத்தில் கூடுதல் விபரங்களை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அக் 22 ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி, முதலைபட்டியில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று (நவ 10) அதிகாலை 4.30 மணி முதல், பேருந்துகள் இயக்கப்பட்டன. இனி இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்படும்.

டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளி, பி.ஜி.பி. இன்டர்நேஷனல் பள்ளி, பி.ஜி.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற மையங்களில், அரசு பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார் (ஓய்வு), மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இன்று முதல் செயல்பட தொடங்குவதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு நேற்று மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி செயற்பொறியாளர் ஆ.சண்முகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இ.எஸ்.முருகேசன், முருகன், துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

➤மின்னணு முறையில் பயிர் கணக்கீடு செய்யும் பணி ➤புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு ➤வாக்காளர்கள் சிறப்பு முகாம் ➤தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு ➤ரேஷன் கார்டுதாரர்களுக்கு அறிவிப்பு ➤தனியார் கல்லூரி பேராசிரியருக்கு விருது

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று மோகனூர் வட்டம் அக்ரஹார மணப்பள்ளியில் நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்பட உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று, கொண்டிசெட்டிப்பட்டி, விநாயகர் தெரு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு குழந்தையின் உடல் எடையை எடை மெஷின் மூலம் சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.