Namakkal

News March 28, 2024

நாமக்கல்: கண்ணீர் அஞ்சலி செலுத்திய மதிமுகவினர்

image

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவால் மரணமடைந்தார் அவருக்கு மதிமுகவின் நாமக்கல் நகரக் கழகத்தின் சார்பில் நாமக்கல்லில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் நாமக்கல் நகர செயலாளர் வைகோ பாலு தலைமையில் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் தொண்டரணி அமைப்பாளர் மூர்த்தி தொழிலாளர் அணி சண்முகம் ஆபத்துகள் அணி அன்பு மாவட்ட பிரதிநிதி எருமப்பட்டி மனோகரன் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News March 28, 2024

நாமக்கல் மக்களே இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் 

image

மக்களவை 24 தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான செல் போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஹர்குன்ஜித்கௌர் I.A.S 94899 89145, அர்ஜூன் பேனர்ஜி I.R.S. 94899 89144 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா தெரிவித்துள்ளார்

News March 28, 2024

நாமக்கல்: 6,600 பேருக்கு அஞ்சல் படிவம் வழங்கல்

image

நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 4100-பேருக்கும்,மாற்று திறனாளிகள் 2500 பேருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.தேர்தல் நடக்கும் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தேர்தல் அலுவலர்கள் உரிய பாதுகாப்புடன் நேரடியாக இவர்கள் வீட்டிற்கு சென்று,அஞ்சல் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மேற்கொள்வர்.

News March 28, 2024

நாமக்கல்: தேர்தலில் போட்டியிட 47 பேர் வேட்பு மனு 

image

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் கடந்த 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது கடைசி நாளான இன்று மாட்டு வண்டிகளில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இன்று மட்டும் 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் வேட்பு மனு பரிசீலனை 28ஆம் தேதி நடைபெறுகிறது 30 – ந்தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம்.

News March 27, 2024

நாமக்கல்: ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை 24 தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவுற்றது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இது வரை 58 பேர் தங்களது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அவர்களிடம் தாக்கல் செய்துள்ளனர் கடைசி நாளான இன்று ஓரே நாளில் மட்டும் 31 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர் இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

News March 27, 2024

நாமக்கல்லில் 58 பேர் வேட்புமனு தாக்கல்

image

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் துவங்கியது. இந்நிலையில் இன்று 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால், ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு தாக்கல் செய்தனர். மொத்தமாக 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

நாமக்கல் தேர்தல் பார்வையாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

image

நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி அர்ஜூன் பேனர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நாமக்கல் நகருக்கு வந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.தேர்தல் பார்வையாளர்களுடன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இன்று 27.03.2024 ஆலோசனை நடத்தினார்கள்.

News March 27, 2024

நாமக்கல் ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தலைமையில் இன்று(27.03.2024) ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலில் 100 ஓட்டுப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் பொதுப்பார்வையாளர்‌ செல்வி ஹர்ஜித் கவுர் இ.ஆ.ப தேர்தல் செலவினப்பார்வையாளர்‌ அர்ஜுன் பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

News March 27, 2024

நாமக்கல்லில் போஸ்டரால் பரபரப்பு 

image

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும், வேட்பாளர் தமிழ்மணி உருவம் பொறித்த போஸ்டர்கள் அதிக அளவு இரண்டு தினங்களாக ஒட்டப்பட்டுள்ளது. இது நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ளதாகவும் , இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்…

News March 27, 2024

நாமக்கல் : 10 ம் வகுப்பில் 417 பேர் தனித் தேர்வர்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 92 தேர்வு மையங்களில் 10, 335 மாணவர்களும் 9, 697 மாணவியர்களும் என மொத்தம் 20, 032 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை எட்டு தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 417 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களில் 334 பேரும் அடங்குவார்கள்

error: Content is protected !!