India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை 2024 தேர்தல் நாமக்கல் நாடாளுமன்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பாக இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இதன் ஒரு கட்டமாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு மையத்தில் தனது தபால் வாக்கினை செலுத்தினார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 19.04.2024 அன்று தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றிபெற நூதன முறையில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன், நாமக்கல் நகரம் சந்தைபேட்டை புதூரில் இன்று சலவை தொழிலாளியிடம் சலவை செய்து வாக்கு சேகரித்தார். இவருடைய செயல் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையம் சாலையில் நடந்து சென்றவர்களை வெறி நாய் துரத்தி கடித்ததில் குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். கவுண்டம்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று திடீரென சாலையில் செல்பவர்களை கடிக்க ஆரம்பித்தது. பொதுமக்கள், கற்களால் நாயை விரட்டி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். என்னுடைய விவசாயி சின்னம் எங்கே? அந்த சின்னத்துடன் சீமானை தேர்தலில் சந்திக்க விடக் கூடாது என்ற பயம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று வெறிநாய் கடித்ததில் 11 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறை, வேலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் பரமத்தி வேலூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தொடங்கி வைத்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.
மக்களவை 24 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாமக்கல் மக்களவை பொது தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்ட நாயுடு நல சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும், யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு 26 ஆம் ஆண்டு விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.