India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு ச.உமா மக்களவைத் தேர்தலுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இதனிடையே திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லூரியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா மக்களவைத் பொதுத்தேர்தல் 24 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மக்களவைத் 24 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நேதாஜி மக்கள் இயக்க சார்பில் நிறுவனர் நடராஜன் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்.தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இன்று திருச்செங்கோடு பகுதியில் பொது மக்களை நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரமாக வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களவைத் 2024 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே அரசு அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் தனது தபால் வாக்கினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் நேற்று செலுத்தினார்.
மக்களவைத் 2024 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளத. இதனிடையே அரசு அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் தனது தபால் வாக்கினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் இன்று மகிழ்ச்சியுடன் செலுத்தினார்.
மக்களவைத் 24 தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது.100% வாக்களிக்க வேண்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக வருகிற 16-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனைவரும் வாக்களிக்க வேண்டி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது விருப்பமுள்ளவர்கள் 85086 41786 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் விவரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
மக்களவைத் 24 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதனிடையே நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா 100 % வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக இன்று இராசிபுரம், பேளுக்குறிச்சி வார சந்தையில் ஆய்வு மேற்கொண்டு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் டிஎஸ்பி இமயவரம்பன் முன்னிலையில் வாலரை கேட் பகுதியில் துவங்கி சி.ஹெச்.பி காலனி, அண்ணா சிலை, நான்கு ரத வீதிகளின் வழியாக சங்ககிரி ரோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவுற்றது.
மக்களவைத் 24 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் அலுவலர் ச.உமா 100 % வாக்குப்பதிவுக்கான இதற்காக இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இதனிடையே நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் செல்பி பாய்ண்ட் விழிப்புணர்வு பதாகை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.கோவிலுக்கும் பக்தர்கள் செல்பி பாய்ண்ட் முன் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.
நாமக்கல் நகரில் தோசை ஹட் எனும் புதிய சைவ உணவக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். இந்த கடையில் 70க்கும் மேற்பட்ட சைவ வகைகளில் தோசை கிடைக்கும் என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
நாமக்கல், கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் பொது வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.