India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதிகளில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, 85-வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதியதில் சீராம்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகியோர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும், ஸ்ரீதர் என்பவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா, தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலையில் இன்று (5.4.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை 20 லிட்டர் குடிநீர் கேன்களில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல், திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கோவில் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 85 வயதுக்கு மேற்பட்ட 4113 வாக்காளர்களும், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 2546 வாக்காளர்களும் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு 130 மண்டல அலுவலர் தலைமையில் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால் வாக்குபதிவு செய்யும்பணி இன்றும், நாளையும் நடைபெறும்.
மக்களவை 2024 தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது இதனிடையே நாமக்கல் பகுதியில் அமைந்துள்ள வங்கிகள் அமைப்புகள் சார்பில் தேர்தல் போஸ்டர்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் நகரில் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.
மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்ஜித் கவுர் அவர்கள் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வருகின்ற நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக மாவட்ட தலைமை தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தேர்தல் பணி சம்பந்தமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் மக்களிடையே எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும், கட்சி சாதனைகள் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சேலம் கோபி மருத்துவமனை (ம) ராசிபுரம் தனியார் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் (07-04-2024) ஞாயிற்றுக்கிழமை அன்று ராசிபுரம் மேட்டு தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இம்முகாமில் காய்ச்சல் கண்காணிப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.