India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மதுரை வீரன் புதூர், லக்கம்பாளையம் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாநகராட்சி சார்பாக தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 489 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா விடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உமா நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்தார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் இன்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையில் சடலமாக காவல்துறையினரால் காணப்பட்டது. இந்த சம்பவ நடைபெற்ற இடத்தில் இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் சுகுவனம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத திங்கள்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 18-ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம். நாமக்கல் 5 மி.மீ, பரமத்திவேலூர் 4 மி.மீ, சேந்தமங்கலம் 1 மி.மீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 5.10 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 15.10 மிமீ மழை பதிவாகி உள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமகிரி என்ற பெயரில் இருந்து “நாமக்கல்” என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. மேலும், “நாமகிரி” என்று அழைக்கப்படுவது 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை ஆகும். இது நகரின் நடுவில் உள்ளது. இவ்வூருக்கு “அரைக்கல்” என்றும் பெயர் இருந்தது. “நாமகிரி” என்பதே பின் நாளில் “நாமக்கல்” என உருவானதாக கூறப்படுகிறது. நாமக்கல் மக்களே உங்க ஊருக்கு எப்படி பெயர் வந்ததை கீழே கமெண்ட் பண்ணுங்க.

1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்க்களர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்
3. நாமக்கல்லில் இமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
4. நாமக்கல்லில் கூட்டுறவு வார விழா நாளை நடைபெறுகிறது
5. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு விருந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – வேத பிறவி (94981 67158), ராசிபுரம் நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர்- ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கூட்டுறவுத்துறை 71-ஆவது அனைத்திந்தியக்கூட்டுறவு வார விழா-2024 கூட்டுறவுகளிடையே ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் வலுப்படுத்துதல் நாளை (18.11.2024) திங்கட்கிழமை நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் பிற்பகல் 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கலெக்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று 16ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 1 முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ.5.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.