Namakkal

News April 20, 2024

நாமக்கல் நாடாளுமன்றத்தில் 78.16 % வாக்குப் பதிவு

image

மக்களவை 24 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ஏப் 19 காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுற்றது மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். அதில் சங்ககிரி 81.75, திருச்செங்கோடு 75.75, பரமத்தி வேலூர் 77.26, ராசிபுரம் 81.59, நாமக்கல் 74.32, சேந்தமங்கலம் 78.08 வாக்குகள் பதிவாகி உள்ளது . 6 சட்டமன்ற தொகுதியின் மொத்த சராசரி 78.16 சதவீதமாகும்.

News April 20, 2024

மின்னணு இயந்திரங்கள் வைக்கும் வரையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக, விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் வைக்கப்பட உள்ள நிலையில், நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 19, 2024

முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்களிப்பு

image

நாமக்கல், பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் தொடக்கப் பள்ளியில் உள்ள பூத் எண் 226-ல் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது குடும்பத்துடன் இன்று வந்து வாக்களித்தார். மேலும் காலை முதலே பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

News April 19, 2024

9 மணி நிலவரப்படி 12.88 சதவீதம் ஓட்டு பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது, மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில், 9 மணி நிலவரப்படி, 12.88 சதவீதம் ஓட்டு பதிவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

News April 19, 2024

நாமக்கல்லில் திமுக கூட்டணி வேட்பாளர் வாக்குப்பதிவு

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்
வி.எஸ்.மாதேஸ்வரன்
பொட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து செலுத்தினார். வாக்குப்பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

News April 18, 2024

நாமக்கல் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

நாமக்கல்: வாக்குச் சாவடிக்கு சென்று வர வாகன ஏற்பாடு

image

மக்களவை 24 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு இலவசமாக சென்று திரும்ப மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு அரசு சார்பில் அரசு வாகனங்களில் இலவசமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 18, 2024

நாமக்கல்: தேர்தல் பணியில் 2700 காவலர்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க ஏதுவாக 2, 786 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உ.மா தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

நாமக்கல்: கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு

image

மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹெர்குல் ஜித் கவுர் முன்னிலையில் இன்று  நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 18, 2024

நாமக்கல்லில் வாக்கு மையம் தயார்

image

நாடாளுமன்ற தேர்தல் ஒட்டி நாமக்கல்லில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கோட்டை தொடக்க பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளன.வாக்கு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.வாக்குப்பெட்டிகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.பதற்றமான வாக்குசாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!